பிள்ளைகளின் பிரபோதம் மிக்க மனம் அவர்களை புத்திசாலிகளாக்கி, அதன் மூலம் மோசடி மற்றும் ஊழலற்ற சமூகத்திற்கான தனிநபர்களை உருவாக்குகிறது என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். அத்துடன், எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள், பிள்ளைகளை தங்கள் பிள்ளைப் பருவத்தை அதே வழியில் கழிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு நேற்று (16) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
‘
AI for Transforming Public Service’ என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பத்து அமைச்சுக்களின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆரம்ப பிரவேசமாக, அரச அதிகாரிகளை அறிவூட்டுதல் மற்றும் தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும், அரச சேவை அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் அரச சேவையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய இந்த செயலமர்வில் முக்கிய உரை நிகழ்த்தினார். இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க, ஸமிச அபேசிங்க செயலமர்வில் வளவாளர்களாக பங்கேற்றனர்.
தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிச்ச, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.
இந்திய தூதகரத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகஸ்ட் 19 பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
- சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்
கை விரல் அடையாளம் வைத்தல் மற்றும் தற்போதைய மேலதிக நேரக் கொடுப்பனவுக்கு உடன்பட்டால் மட்டுமே தபால் திணைக்களத்தின் வேலைநிறுத்தம் செய்பவர்களுடன் கலந்துரையாடல்களுக்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
மின்சார விநியோகத்தை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்தல், மின் தடைகளைக் குறைத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அமைப்பில் ஒருங்கிணைப்பதை எளிதாக்குதல் போன்ற பல பிரச்சினைகளை இலக்காகக் கொண்டு, மின்சார பரிமாற்ற அமைப்பின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துமாறு எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி பணிப்புரை விடுத்தார்.
கொரியா குடியரசின் சியோங்னம் (Seongnam) மற்றும் கயர்யோன்ங் (Gyeryong) வில் நடைபெற்ற திறந்த டய்கோண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படையின் லெப்டினன்ட் ஆராச்சிகே நிசங்க, 2025 ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய திகதிகளில் தாய்நாட்டிற்காக இரண்டு (02) தங்கப் பதக்கங்களை வென்றார்.
18.08.2025 அன்று பிற்பகல் 3.00 மணி வரை 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத, குறிப்பிட்டுள்ளார்.
2025 ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
இலங்கையுடன் நெருக்கமான உறவுகளைப் பேண கொரியாவின் புதிய ஆட்சி தயாராக உள்ளது
- கொரியத் தூதுவர் மியோன் லீ
KAS (Konrad Adenauer Stiftung) மன்றத்தின் தலைமையில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய இளம் அரசியல் தலைவர்கள், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்துடன் சந்திப்பு


