யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் இன்று (01) பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சதீவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் இன்று (01) பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சதீவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
2025 செப்டம்பர் 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 செப்டம்பர் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று (02ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் ஆண்டிகம, பலல்ல, மீகஸ்வெவெ, பம்பரகஸ்வெவ, பக்கமூன, அரலகங்வில, செங்கலடி மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடு
க்கவுள்ளது.
யாழ்ப்பாண நூலகத்தை மின் நூலகமாக (e-library) அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் 300 மில்லியன் ரூபாவிலான மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்றைய தினம் (01.09.2025) திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக மாண்புமிகு ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களின் பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்காக புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (31) நடைபெற்றது.
கைவினைப் பொருட்கள், பரிசுகள், ஆபரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் தொழில் துறையில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதற்குக் காணப்படும் தொழில் முயற்சியாளர்களுக்கான விசேட திட்டமொன்றை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) அண்மையில் கொழும்பில் நடாத்தியது.
கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி வாரம்"
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் Healthy Sri Lanka திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஆரோக்கிய நடமாடும் மருத்துவ முகாம் பாலிந்தநுவர கெலின்கந்த கொஸ்குலன கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் (30) நடாத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பல புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளிலும் மற்றும் திறந்து வைக்கும் நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]