All Stories

சப்ரகமுவ மாகாண சபையில் யோகா தின கொண்டாட்டம்

சர்வதேச யோகா தினத்துடன் இணைந்து கண்டியில் உள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சப்ரகமுவ மாகாண சபை இணைந்து ஏற்பாடு செய்த யோகா நிகழ்ச்சி அண்மையில் சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சப்ரகமுவ மாகாண சபையில் யோகா தின கொண்டாட்டம்

பெலிஹூல்ஓயா சுற்றுலா தலமாக மாற்றப்படும்

பலாங்கொடை பெலிஹூல்ஓயாவை சுற்றுலா தலமாக மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.

பெலிஹூல்ஓயா சுற்றுலா தலமாக மாற்றப்படும்

காக்கை தீவு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது

மே.மா/ களனி எச்.கே. தர்மதாச கல்லூரி மாணவர்களுடன், Green Team – Kelaniya அமைப்பு இணைந்து முன்னெடுக்கப்பட்ட காக்கை தீவு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதாக கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

காக்கை தீவு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது

தமன்கடுவ பிரதேச செயலகத்தில் E-பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் பணி ஆரம்பம்

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தமன்கடுவ பிரதேச செயலகத்தில் E-மக்கள் தொகை பதிவு திட்டத்தின் கீழ் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் பணி நேற்று (17) உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது.

தமன்கடுவ பிரதேச செயலகத்தில் E-பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் பணி ஆரம்பம்

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, டிஜிட்டல் மயப்படுத்தல் செயல்முறையை விரைவுபடுத்தியது

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அந்த அமைச்சின் உள்ளக சேவைகள் மற்றும் இராஜதந்திர சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெளிநாட்டுத் தூதுக்குழு சேவைகளை டிஜிட்டல் முறையில் நிர்வகித்தல், விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் தூதரக சேவைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான முறையான பொறிமுறையை நிறுவுதல் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்து இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயனாளிகளுக்கு தகவல் மற்றும் சேவைகளுக்கான சிறந்த பிரவேசத்தை உறுதிசெய்து, பயனாளிகள் - நட்பு இணைய இடைவழிமுறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களும் இதன்போது வலிறுத்தப்பட்டன.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ ஆவணங்களை சமர்ப்பித்தல் போன்ற நடைமுறைகளை இலகுபடுத்தும் செயற்பாட்டு நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. இந்தச் மறுசீரமைப்புகள் நிர்வாகத் தாமதங்களைக் குறைத்து, பயனாளிகளின் வசதியை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில்,டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசாத் பியசேன, தூதரக விவகாரங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம்

நிர்மல பரணவிதான, மக்கள் இராஜதந்திரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதில் மேலதிக பொது முகாமையாளர் (சர்வதேச விவகாரங்கள்) பீ.ஜீ.ஜீ.எஸ். யாப்பா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, டிஜிட்டல் மயப்படுத்தல் செயல்முறையை விரைவுபடுத்தியது

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிறந்த பௌதிகவியலாளரும் கல்வி மேலாண்மைத் தலைவருமான பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளை நேற்று (17) பொறுப்பேற்றார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர்  கடமைகளைப் பொறுப்பேற்றார்.