பிரதமர் இன்று (18) கொழும்பில் உள்ள ஐரிசி ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற "கழிவுகளுக்கு அப்பால்: தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர் மற்றும் ஆற்றலை மேம்படுத்துதல்" என்ற தலைப்பிலான உயர்மட்ட கொள்கை உரையாடலில் பங்கேற்றார்.
இந்த கொள்கை உரையாடல் உலக வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தால் பிரதமர் அலுவலகம் மற்றும் விவசாய, காணி மற்றும் வாழ்வாதார அமைச்சு மூலம் கேட்ஸ் மன்றம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளின் ஆதரவுடன் இணைந்து நடத்தப்பட்டது.


