All Stories

இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை வலுப்படுத்துவதற்காக ஆழமற்ற நீரில் அளவிடும் கருவியொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியது

இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை அபிவிருத்தி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், நவீன ஆழமற்ற நீர் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் Shallow Water Multi-Beam Echo Sounder இயந்திரத்தை இலங்கை கடற்படை நீர்வரைவியல் சேவைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வானது, நேற்று முன்தினம் (2025 பெப்ரவரி 18) கொழும்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவன வளாகத்தில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ. Paul Stephens மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோரின் தலைமையில் நடைப்பெற்றது.

இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை வலுப்படுத்துவதற்காக ஆழமற்ற நீரில் அளவிடும் கருவியொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியது

உலக இராணுவ தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தினரின்வெற்றிகரமான சர்வதேச இராணுவ பேரவை ஓட்டம்

உலக இராணுவ தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் 2025 பெப்ரவரி 18 ம் திகதி அன்று சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையினால் ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள ஆயுதப் படைகளிடையே உடற்தகுதி, இராணுவ தயார்நிலை மற்றும் சர்வதேச நட்புறவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் பங்கேற்றனர்.

உலக இராணுவ தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தினரின்வெற்றிகரமான சர்வதேச இராணுவ பேரவை ஓட்டம்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி 20ஆம் திகதிக்கான காலநிலை முன்னறிவிப்பு 

2025 பெப்ரவரி 20ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது

காலி, மாத்தறை,களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் சில இடங்களில் மலை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

 

நாட்டின் சில பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான காலநிலை நிலவும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்தி, வடமத்தி, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டத்துடனான நிலைமை காணப்படும்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் - 2023 வைப்புப் பணம் மீளளித்தல்

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் - 2023 வைப்புப் பணம் மீளளித்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு பின்வருமாறு:IMG 20250219 WA0017

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் - 2023 வைப்புப் பணம் மீளளித்தல்

தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு இலங்கை நிருவாக சேவைச் சங்கத்தின் பாராட்டு

2025 அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட அறிக்கை தொடர்பாக இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் பாராட்டுக் கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் வருடத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட அறிக்கைனால் காணப்படும் வரையறுக்கப்பட்ட நிதி அளவினுள் அரசாங்க ஊழியர்களுக்காக விசேடமாக அடிப்படைச் சம்பளம் மிகவும் பெறுமதியானதாக அதிகரைப்பதன் ஊடாக பாரியளவில் குறைந்த சம்பளம் வரும் அரசாங்க ஊழியர்களுக்கு சாதாரணமாக திட்டமிடுவதற்கு அதிக முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக எமது சங்கம் அவதானித்துள்ளது.

விஷேடமாக வரியை தவிர்ப்பதற்கான நிதி கொடுக்கல் வாங்கல்கள், டிஜிட்டல் கட்டமைப்பை பயன்படுத்தி அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல், வரி சேகரிப்பு நிறுவனங்களை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மேலும் உறுதி செய்வதற்காக அவர்களுக்கு உயர் இலக்கை வழங்குதல், வரி ஆலோசகர்கள் போன்றவர்கள் தொடர்பாக மக்களின் கருத்தை சரியான வரவு செலவுத் திட்ட அறிக்கை முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வெளியிட்டமை மிகவும் பாராட்டத்தக்கது.

தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு இலங்கை நிருவாக சேவைச் சங்கத்தின் பாராட்டு