ஜனாதிபதி ஆலோசகராக (ஊடக) பிரபல ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபுஆரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரவிருக்கும் நோன்பு காலத்திற்கு தயாராகும் முஸ்லிம் சமூகத்தை ஆதரிப்பதற்காக, ஹப்புத்தளை, தியத்தலாவை மற்றும் கஹகொல்ல ஜும்மா பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம்பழங்களை விநியோகிக்கும் திட்டத்தை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் 2025 பெப்ரவரி 24 அன்று முன்னெடுத்தனர்.
இலங்கையில் உள்ள கனடா எல்லை சேவைகள் நிறுவனத்தின் இணைப்பு அதிகாரி திருமதி கசுமி குபோ அவர்கள் 2025 பெப்ரவரி 19, அன்று யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பெப்ரவரி 23ஆம் திகதி இடம்பெற்றது.
நரம்பியல் சத்திர சிகிச்சை மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பட்டப்பன் பின் படிப்பு பயிற்சிக்காக இளம் வைத்தியர்களை அதிக அளவில் ஊக்கப்படுத்துவதற்காக அவசியமான விடயங்கள் குறித்து தற்போது சுகாதார அமைச்சின் பூரண கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்கள் மற்றும் வளங்களை அமைச்சு தொடர்ந்தும் வழங்கும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டமும், சுற்றுச்சூழல் அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் வறண்ட மண்டல காலநிலை மாற்றங்களுக்கு ஆளாகும் சமூகங்களின் திறனை மேம்படுத்தும் திட்டத்தின் மாவட்ட செயற்பாட்டுக் குழுவின் முதல் அமர்வு கடந்த (21) மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், குருநாகல் மாவட்டத்தின் கொட்டவெஹெர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ, திகன்னேவ கிராமத்தில் நிறுவப்பட்ட 1082 வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.


