வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பெப்ரவரி 23ஆம் திகதி இடம்பெற்றது.
நரம்பியல் சத்திர சிகிச்சை மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பட்டப்பன் பின் படிப்பு பயிற்சிக்காக இளம் வைத்தியர்களை அதிக அளவில் ஊக்கப்படுத்துவதற்காக அவசியமான விடயங்கள் குறித்து தற்போது சுகாதார அமைச்சின் பூரண கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்கள் மற்றும் வளங்களை அமைச்சு தொடர்ந்தும் வழங்கும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டமும், சுற்றுச்சூழல் அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் வறண்ட மண்டல காலநிலை மாற்றங்களுக்கு ஆளாகும் சமூகங்களின் திறனை மேம்படுத்தும் திட்டத்தின் மாவட்ட செயற்பாட்டுக் குழுவின் முதல் அமர்வு கடந்த (21) மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், குருநாகல் மாவட்டத்தின் கொட்டவெஹெர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ, திகன்னேவ கிராமத்தில் நிறுவப்பட்ட 1082 வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையினர், நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் 2025 பெப்ரவரி 22ஆம் திகதி இரவிலும், 23ஆம் திகதி காலையிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடி படகுகளுடன் முப்பத்திரண்டு (32) இந்திய மீனவர்கள் கைது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பெப்ரவரி 24ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.
கீர்த்திமிக்க எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்ற உரையாடலில் புத்தாக்கம் என்பது மிகவும் முக்கியமான தலைப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு புத்தாக்க தீவு உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் சுபீட்சத்திற்கான பிராந்திய பணிப்பாளர் மேத்யூ வர்கிஸ் அவர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார தொலைநோக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் உலக வங்கிக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]