பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை-கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார்.

பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை-கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார்.
🔸 2023 மே மாதம் முதல் 2024 ஜூன் வரை வயதில் குறைந்தவர்கள் 683 பேர் வீட்டு பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது
நாட்டில் மத மற்றும் கலாசார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம் - ஜனாதிபதி
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 23 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையில், 23 வது காலாட் படைப்பிரிவு, 233 வது காலாட் பிரிகேட் மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் செவனப்பிட்டியவில் 70 சாமணேர துறவிகளுக்கு (புதிய துறவிகள்) அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை 2025 பெப்ரவரி 27 அன்று ஏற்பாடு செய்தனர்.
பதுளைக்கும் ஹாலிஎலவுக்கும் இடையிலான 179/60 மைல்கல்லுக்கு அருகிலுள்ள ரயில் பாதை 2025 மார்ச் 01 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து தடைபட்டதுடன் இதனால் அப்பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
மழை நிலைமை:
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கைது செய்வதற்கான உத்தரவு (வரண்ட்) பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது, இதனால் அவர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவு பிரிவால் வெளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை இலங்கைக்கு கிடைக்கும் என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் தொடர்பாக இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தலைவர் இதனை குறிப்பிட்டார்.
எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்படுவதற்கு நாம் இடமளிப்பதும் இல்லை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
சமயப் பாடங்களை கற்பதற்காகக் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விக் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் போதனா விஞ்ஞான டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025 மார்ச் மாதம் கல்விக் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் போதனா விஞ்ஞான டிப்ளோமாதாரிகளுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை ஒதுக்கி வைக்க வேண்டி ஏற்படுவதனால் சமயப் பாடங்களில் (தர்மாச்சார்ய) சித்தியடைந்த இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக 2019 மே 25 ஆம் திகதி அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு இணங்க இவ்வாட்சேர்ப்புத் தொடர்பாக அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு 2024 செப்டம்பர் 25 ஆம் திகதி ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தெளிவுபடுத்தினார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]