அண்மையில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியின் தாக்கத்தால் மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாவிலாறு அண்மித்த பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின.

அண்மையில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியின் தாக்கத்தால் மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாவிலாறு அண்மித்த பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின.
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மிகுந்த பக்தியுடன் மகா சிவராத்திரி தினத்தை இன்று கொண்டாடுகின்றனர்.
புத்தளம், தளுவ பகுதியில் இலங்கை கடற்படை 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, எண்பத்தாறாயிரத்து எண்ணூறு (86800) பீடிகள், ஆயிரத்து இருநூற்று ஐம்பது (1250) கி கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், நூற்று முப்பத்திரண்டு (132) பதப்படுத்தப்பட்ட பீடி இலை பொதிகள், சுமார் நூற்று மூன்று (103) கிலோகிராம் நிலக்கரி மற்றும் ஆயிரத்து ஐநூற்று தொண்ணூற்று நான்கு (1594) ஷாம்பு பாக்கெட்டுகள் மற்றும் ஒரு சந்தேக நபரை (01) ஒரு லொரியுடன் கடற்படையினர் கைப்பற்றினர்.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 பெப்ரவரி 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட e-BMD கட்டமைப்பு, தற்போது 62 தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.
இலங்கை கடற்படை, ”முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் முக்கிய பங்காளியாக, முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு மேற்கொண்ட தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக, மன்னாரின் தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) பொதிகளை கொண்டு சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் (01) ஒரு டிங்கி படகும் இன்று (2026 பிப்ரவரி 14) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து மக்களுக்கும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்
அனைத்து தரப்பினரும் ஒன்றாக கலந்துரையாடி தீர்வை எட்ட வேண்டும்
- ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான செயற்பாட்டுக் குழுவின் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை:
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையயாளர் (நிதி) மற்றும் வர்த்தகர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறப்பட்ட முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பில், வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் நோக்கில், ஒரு கிலோ பூண்டை ரூபா 135/- விலையில் ஒரு தனியார் தரப்பினருக்கு 54860 கிலோ பூண்டை விற்றதன் மூலம் ரூபா 17,006,600 /- இழப்பினை நிறுவனத்திற்கு ஏற்படுதியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிதல் மற்றும் சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையயாளர் (நிதி) மற்றும் இரு வர்த்தகர்கள் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 2026.02.12 அன்று காலை முறையே 9.00 மணி மற்றும் காலை 9.14 மணிக்கு மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]