All Stories

தற்போது நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்தில் பணியாற்றி வரும் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் கார் பரிமாற்றப் பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

 ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நடாத்தப்பட்ட விசாரணை தொடர்பில், மோட்டார் வாகனத் திணைக்களம் 17.02.2017 அன்று பதிவு இல GZ-6889 கொண்ட மோட்டார் வாகனத்தை மாற்ற முறையற்ற விதத்தில் அனுமதி வழங்கியுள்ளது.

மேற்படி முறையற்ற அனுமதியை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்தில் தற்போது பணியாற்றி வரும் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் கார் பரிமாற்றப் பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் 12.02.2026 அன்று மு.ப 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்தில் பணியாற்றி வரும் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் கார் பரிமாற்றப் பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஓய்வு பெற்ற பொது முகாமையாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவரால் இரண்டு அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், சபையினால் செயல்படுத்தப்பட்ட கண்டி வடக்கு பாத்ததும்பர ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் ஒப்பந்தப் பணத்திலிருந்து ஒரு டொயோட்டா பிராடோ SUV ரக ஜீப் வண்டி வாடகை அடிப்படையில் பி.என். ஆட்டோ ஹோல்டிங் என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் விதிகளை மீறி செயல்பட்டு, குறித்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியமை, குறித்த வாகனம் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை சரிபார்க்காமல், முறையான பற்றுச்சீட்டு பெறாமல் வாடகைப் பணமாக சுமார் ரூபா 12,750,000/- மேற்படி நிறுவனமான விநியோகஸ்தருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

கொள்முதல் விதிகளை மீறி செயல்பட்டு, மேற்படி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பினை ஏற்படுத்தி ஊழல் குற்றம் புரிந்தமை மற்றும் அந்தக் குற்றத்தைச் செய்ய சதி செய்த குற்றச்சாட்டின் பேரில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஓய்வு பெற்ற பொது முகாமையாளர் ஒருவர் 2026.02.12 அன்று மு.ப 9.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 2026 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஓய்வு பெற்ற பொது முகாமையாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது

க. பொ.த. (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குதல் தொடர்பான அறிவித்தல்

காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் மாகாண அலுவலகங்கள் மற்றும் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகம் என்பன, 2026 பெப்ரவரி 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை திறந்திருக்கும் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

2026 பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் நடைபெறவிருக்கும் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மட்டுமே குறித்த அலுவலகங்கள் அவ்வாறு திறந்திருக்கும். (தொடர்புடைய கடிதத்தை ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.drp.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலமும் பதிவிறக்கம் செய்யலாம்).

க. பொ.த. (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குதல் தொடர்பான அறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2026 பெப்ரவரி 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2026 பெப்ரவரி 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு