ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவுக்கு வருகை தந்தது
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' இன்று (2025 அக்டோபர் 28,) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ இன்று (2025 அக்டோபர் 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலை வரவேற்றனர்.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்களுக்காக செயல்படுத்தப்படும் 'Vision' தொடர் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக, கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று (28) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகன விபத்துகள் அதிகரித்து வருவதன் காரணமாக உயிரிழப்புகள் மற்றும் பாரிய காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கும் நோக்குடன், 2025-09-25 ஆம் திகதியிடப்பட்ட 2455/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டின் இல. 2 மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலைகள்) கட்டளைகள் திருத்தப்பட்டுள்ளன.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
