டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Gift Sri Lanka Foundation மற்றும் The Georgia Buddhist Vihara (GBV) இனால் 16,000 அமெரிக்க டொலர் நிதி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
"தித்வா" சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலையினால், மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது,
மத்திய மலைநாட்டில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக நாளை (19) மற்றும் திங்கட்கிழமை (22) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரான்ஸ் செனட் சபையின் உறுப்பினர் கௌரவ சமந்தா கேசபோன் (Samantha Cazebonne) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (16) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
2025 டிசம்பர் 19ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் முற்றாக உடைந்த முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலத்தை, இலங்கை இராணுவ பொறியாளர்கள் புனரமைத்து, பிரதேசத்தின் அத்தியாவசிய போக்குவரத்து இணைப்பை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர்.
சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் முற்றாக உடைந்த முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலத்தை, இலங்கை இராணுவ பொறியாளர்கள் புனரமைத்து, பிரதேசத்தின் அத்தியாவசிய போக்குவரத்து இணைப்பை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), நேற்று (17 டிசம்பர்) 'செனெஹச' கல்வி, வள, ஆய்வு மற்றும் தகவல் மையம் (SERRIC) வளாகத்தில் புனரமைக்கப்பட்டு குழந்தைகள் பூங்கா மற்றும் உணர்வு (Sensory) பூங்காவையும் திறந்து வைத்தார்.
கீரி சம்பா மற்றும் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம்!
நுகர்வோரை சுரண்டி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களுக்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தினால் அண்மையில் (2025.12.16) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் சவூதி அரேபியா இடையேயான இராஜதந்திர உறவுகளுக்கு 50 வருட நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீட்டிற்கு அமைச்சரவை அனுமதி அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;
2024 ஆம் ஆண்டாகும் போது இலங்கைக்கும் சவூதி அரபியா நாட்டுக்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஜம்பது (50) ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர தொடர்புகளைத் தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கும், மற்றும் இருநாட்டு மக்களிடையே பரஸ்பர நல்லுறவை விருத்தி செய்வதற்குமான நோக்கங்களுடன் இருநாடுகளின் வரலாற்றுப் புகழ்வாய்ந்த இடங்களை மையமாகக் கொண்டு நினைவு முத்திரைகள் இரண்டை வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, குறித்த நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் சவூதி அஞ்சல் கூட்டுத்தாபனம் (Saudi Post Corporation) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெளிவு படுத்தினார்.
ஏதிட்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட கைத்தொழில் மற்றும் தொழில்களை விரைவாக மீளக்கட்டியெழுப்புவதற்காக
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகள் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.


