மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, அண்மைய எரிபொருள் விலைகள் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, அண்மைய எரிபொருள் விலைகள் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் 2025 அக்டோபர் 30 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எண்பத்தைந்து (185) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கியுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி (01) ஆகியன கைப்பற்றப்பட்டன.
2025 நவம்பர் 01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
வர்த்தகம், வாணிபத் துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஜா-எலயில் அமைந்துள்ள இலங்கை திரிபோஷா நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் நேற்று (30) ஈடுபட்டார்.
இந்த ஆண்டு இலங்கை சுங்கத்தால் சேகரிக்கப்பட்ட வரி வருமானம் நேற்று (30) மாலை நிலவரப்படி 02 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது என்று சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகன் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இந்த ஆண்டு தாதியர் சேவைக்கு 4,141 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நிகழ்வு என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கூறுகிறார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தால் (National University of Singapore - NUS) வழங்கப்படும் PhD வேட்பாளர்களுக்கான புலமைப்பரிசில் வலையமைப்பு நிகழ்வு (Scholarship Networking Event), கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி. மதுர சேனவிரத்ன அவர்களின் தலைமையில் கொழும்பில் உள்ள சங்ரி-லா ஹோட்டலில் ஒக்டோபர் 31 அன்று நடைபெற்றது.
2025.06.05 அன்று கொழும்பு 11, செட்டியார் தெருவில் உள்ள இரண்டு நகைக் கடைகளில் ரூ.102,000,000/= ( பத்து கோடி இருபது இலட்சம் ரூபாய்) கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டுக் கொள்ளை விசாரணைப் பிரிவு, நடத்திய விசாரணையில், 05 சந்தேக நபர்கள் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால சந்ததியினரையும் சமூகத்தையும் அதிலிருந்து மீட்டெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் தேசிய அரங்கங்கள் பேரவையால் நடத்தப்பட்ட "பதிக் டிசைனர் (NVQ – 3) பதிக் தொழில் பயிற்சி பாடநெறி" மற்றும் "சிவப்பு களிமண் தொடர்பான கலைகள் மற்றும் கைவினைகளில் ஒரு வருட சான்றிதழ் பாடநெறி" ஆகியவற்றை முடித்த கைவினைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சமீபத்தில் (27) பத்தரமுல்ல நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (CETRAC) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்கக்கூடிய, சாதாரண விலையில் வழங்கும் நோக்கத்துடன் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச ஒசுசல - மட்டக்களப்பு கிளை இன்று (31) திறந்து வைக்கப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]