“வளமான நாடு அழகான வாழ்க்கை” யைப் பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு அமைவாக, 'Clean Sri Lanka' திட்டத்தின் கீழ் 425 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“வளமான நாடு அழகான வாழ்க்கை” யைப் பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு அமைவாக, 'Clean Sri Lanka' திட்டத்தின் கீழ் 425 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் பெறும் பிரதான நீர் உட்கொள்ளும் பம்பிங் நிலையத்திற்கான மின்சாரம் இன்று (23) நிறுத்தப்படுவதால், பல பகுதிகளுக்கு இன்று (23) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடமேற்குத் திசையில் வட தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கையர் தினமாக டிசம்பர் மாதம் 12,13, மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் தயார் படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (22) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இத்திட்டம் கொழுப்பு மாநகர சபை மைதானத்தில் மற்றும் விகார மகாதேவி பூங்கா உட்பட அதனை அண்டிய பகுதிகளில் மற்றும் பிரதான வீதிகளை உட்படுத்தியதாக நான்கு வலயங்களில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நிகழ்ச்சித்திட்டம் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்ம வகையில், அனைத்து மாவட்டங்களின் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உணவுக் கலாச்சாங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள், உள்நாட்டு கைத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனை, கூடிய இலங்கையைக் புதிய உற்பத்திகளுக்கான வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள்
இலங்கையர்கள் மத்தியில் இனம், மதம், கலாச்சார ஒருமைப்பாடு, தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி மற்றும் அதிகரித்து எமது நாட்டை மேலும் உயர்ந்த இடத்தில் உயர்த்தி வைப்பதே இலங்கையர் தின தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் என்றும் இலங்கையர் தினமாக தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, இந்த நிகழ்ச்சிகள் அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடாத்துவதற்குத் தயாராக உள்ளதாகவும், மேலும் ஒவ்வொரு பிராந்தியத்தின் கலாச்சார கூறுகள் மற்றும் உணவு கலாச்சாரங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள், கைவினைப் பொருட்களின் கண்காட்சிகள் மற்றும் விற்பனை, புதிய தயாரிப்பு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் இதற்காக ரூ. 300 மில்லியன் நிதி மதிப்பிடப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ரியாத்தில் நடைபெறும் 26வது ஐ.நா. சுற்றுலா பொதுச் சபைக்கு இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் பூட்டானின் தொழில், வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் Namgyal Dorji இடையேயான சந்திப்பு அண்மையில் (20) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது.
இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் இன்று (22) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் காலை 8.30 மணிமுதல் இரவு 7.00 மணிவரை நிதியறிவுக் கண்காட்சி இடம்பெறுகின்றது.


