புத்தளம் மாவட்டத்தின் முதலாவது சிறிய கடற்கரை பூங்கா மாறவில - சிலுவை தேவாலயத்திற்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜெயக்கொடி தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்டத்தின் முதலாவது சிறிய கடற்கரை பூங்கா மாறவில - சிலுவை தேவாலயத்திற்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜெயக்கொடி தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
அரசாங்க நிறுவனங்கள் மற்றும் கோப் குழு குறித்துக் காணப்படும் பொதுவான நிலைப்பாட்டை மாற்றுவதற்கான பொறுப்பு அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களுக்கும் கோப் குழுவுக்கும் உள்ளது – கோப் குழுவின் தலைவர் தெரிவிப்பு
உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவோர்க் சாக்ஸியன் தலைமையிலான உலக வங்கியின் குழுவினர் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கெளரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் அண்மையில் (25) கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர். அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ (வைத்தியர்) நிஷாந்த சமரவீர, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ கபீர் ஹாசிம், வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் குழுக்களின் உறுப்பினர்களும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஒக்டோபர் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) அக்டோபர் 5 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தலசீமியா பிரிவில் சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கான விசேட சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தபால் சேவை மேலும் திறைசேரிக்கு சுமையாக இருக்க வேண்டியதில்லை
- சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை தபால் திணைக்களத்தின் அஞ்சல் உதவியாலர்களாக தெரிவு செய்யப்பட்ட 731 பேருக்காக நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று (06) பிற்பகல் அலறி மாளிகையில் இடம் பெற்றது.
ஒக்டோபர் 05 உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது நாட்டில் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி தேசிய ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வேலையில் இம்முறை நாடு முழுவதும் இடம் பெறும் ஆசிரியர்களைப் பாராட்டு விழாக்களில் கௌரவிக்கப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொழும்பு / புது தில்லி, 10 அக்டோபர் 2025: வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமை மற்றும் புகையற்ற புகையிலையை எதிர்த்துப் போராடுவது ஆகியவை, அக்டோபர் 13 முதல் 15 வரை இலங்கையில் நடத்தப்படும் WHO தென்கிழக்கு ஆசியாவின் எழுபத்தெட்டாவது பிராந்தியக் குழு அமர்வில் சுகாதாரத் தலைவர்கள் விவாதிக்கும் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
வரலாற்று சிறப்பு மிக்க பொலொன்னறுவை சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
புனித சேவியர் ஆண்கள் வித்தியாலயத்தில் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் (03) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் இடம்பெற்றது.
வசானப் (மழைக்காலம்) பருவத்தின் கடைசிப் பௌர்ணமியும் கத்தின சீவர மாதத்தின் ஆரம்ப தினம் வப் பௌர்ணமியில் தான்.
பௌத்த மக்களுக்கு வப்பூரணை பௌர்ணமி தினம் பல காரணங்களுக்காக முக்கியமான ஒரு நாளாகும்.
- உலக குடியிருப்பு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் UN Habitat நிறுவனத்தின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்படும் அம்பத்தலே நீர் வழங்கல் திட்டம் அடையாள ரீதியாக ஜனாதிபதியிடம் கையளிப்பு
உலக குடியிருப்பு தின நிகழ்வுகள் நேற்று (05) காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றன.
சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், அதன் தேசிய நிகழ்வு நடைபெற்றதோடு அதனுடன் இணைந்ததாக ஒக்டோபர் 01-05 வரை குடியிருப்பு வாரம் அறிவிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதி வசதி அற்ற சுமார் 4,000 ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வகையில், வீடமைப்பு அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், நிறைவு செய்யப்பட்ட ஆயிரம் வீடுகளை இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி பொதுமக்களிடம் கையளித்தார்.
UN Habitat இலங்கை அலுவலகத்தின் தலையீட்டின் கீழ் இந்திய அரசின் Coalition for Disaster Resilient Infrastructure (CDRI) உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் அம்பத்தலே நீர் வழங்கல் திட்டத்தின் அடையாள ரீதியான கையளிப்பு உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
பல்வேறு காரணங்களால் வீட்டுப் பத்திரங்கள் தாமதமான ஆயிரம் பயனாளிகளுக்கு காணிஉறுதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 357 பயனாளிகளுக்கு அடையாள ரீதியில் வீட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. வீடு கட்டுவதற்கு நிதி வசதி அற்ற ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 157 பேருக்கு அடையாள ரீதியாக காசோலைகள் வழங்கப்பட்டன.
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்விலும், நகர அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்றார்.
இதேவேளை, உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் கலைத் திறமைகளை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரக் கண்காட்சி மற்றும் வீட்டுத் திட்டமிடல் தொடர்பான படைப்புகள் உள்ளடங்கிய கண்காட்சியிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலகே, தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களின் வீட்டுவசதி கனவை நிறைவேற்ற ஒரு விரிவான திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
வீடு தொடர்பான எண்ணக்கருவை சமூகத்தில் கருத்தாடலுக்கு உட்படுத்துவதன் மூலம் வீட்டு திட்டமிடல் குறித்த முறையான திட்டத்தின் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கைச் சூழலை வழங்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தியை ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்புத் திட்டத்தின் இலங்கை திட்ட முகாமையாளர் ஹர்ஷினி ஹலங்கொட வாசித்தார்.
தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத், மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார் , இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் (அரசியல்) நவ்யா சிங்லா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்பொன்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-10-05


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]