தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய மாநாடு கொழும்பில் இன்று (13) முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறும்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு அக்டோபர் 10 உத்தியோகபூர்வ விஜயத்தை மேட்கொண்டார்.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (ஒக்டோபர் 12) சீனாவின் பீஜிங் நகரை வந்தடைந்தார்.
• தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பூமியுடன் போராடும் மலையக மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்யும் பொறுப்பை நிறைவேற்றுவேன்- ஜனாதிபதி
இலங்கை அஞ்சல் துறையின் ‘எல்ல’ அஞ்சல் நிலையத்தின் சுற்றுலா பயணிகளுக்கான இல்லம் (Tourist House) மற்றும் முத்திரை அலுவலகம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை தபால் துறைக்கு சொந்தமான ‘எல்ல’ தபால் நிலையத்தின் சுற்றுலாபயணிகளுக்கான இல்லம் (Tourist’s House) மற்றும் முத்திரை அலுவலகம் திறப்பு விழா சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் 151 வது உலக தபால் தின நிகழ்வுடன் இணைந்து நடைபெற்றது.
இந்த இரண்டு திட்டங்களும் தபால் துறைக்கு வருவாய் ஈட்டும் திட்டங்களாகும், மேலும் இந்த திட்டங்களின் பிரதான நோக்கம் தபால் துறையின் வருமானத்தை அதிகரிப்பதாகும்.
நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பாக இலங்கை தபால் துறையும் இந்த திட்டங்களை வகுக்க முடியும் முடியும், மேலும் எதிர்காலத்தை வலிமையுடன் எதிர்கொள்ள நேர்மறையான மாற்றம் தேவை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது தெரிவித்தார்.
சுற்றுலாபயணிகளுக்கான இல்ல திறப்பு நிகழ்வு , வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கான நினைவு முத்திரைகள் விற்பனை செய்யும் நிகழ்வு மற்றும் சுற்றுலா இல்லத்தின் முதல் முன்பதிவுகளை ஆரம்பித்தல் ஆகியவை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் திரு. நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் அத்துடன் தபால் மா அதிபர் திரு. ருவன் சத்குமாரவின் பங்கேற்புடன் இங்கு நடைபெற்றன.
2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ‘ எல்ல ’ தபால் நிலையயம் திறக்கப்பட்டது.
அதன் மேல் தளம் தபால் நிலைய தபால் அதிபரின் உத்தியோகபூர்வ தங்குமிடமாக காணப்பட்டது தற்போது ரூ. 4.5 மில்லியன் செலவில் உல்லாச பயணிகளுகக்கான தங்குமிட இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.
ஒரு சுற்றுலா விடுதிக்கு ஏற்றவாறு முழுமையாக புதுப்பித்து, தேவையான தளபாடங்களை வழங்குவதன் மூலமும் 2025 ஆம் ஆண்டில் தபால் நிலையத்திற்கு வருவாய் ஈட்டும் இடமாக இதை மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
தற்போது எல்ல என்பது சுற்றலா பயணிகளை கவர்ந்து ஒரு சுற்றுலா தளமாகும்.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார, துணை தபால் மா அதிபர் (செயல்பாடுகள்) பிரேமச்சந்திர ஹேரத், துணை தபால் மா அதிபர் (மேம்பாடு) துசித ஹுலங்கமுவ, துணை தபால் மா அதிபர் (நிர்வாகம்) சமீஷா டி சில்வா மற்றும் இலங்கை தபால் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
களுத்துறை வேலபுர, கிரம தம்மானந்த, சம்மாந்துறை அல் அர்சாத் கல்லூரிகள் மற்றும் ரிகில்லகஸ்கட பொரமடுல்ல மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு (10) ஜனாதிபதி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஒக்டோபர் 12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
சீனாவில் நடைபெறவுள்ள 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, (11) இன்று இரவு பயணமாகிறார்
ஜனாதிபதி நிதியத்தின் புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், மதிப்புமிக்க NBQSA (National Best Quality Software Awards) கணினி திட்ட விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை வென்றதன் மூலம் அதன் சிறப்பை உறுதிப்படுத்த முடிந்தது.


