அரசாங்க திரைப்பட பிரிவு மீளமைக்கப்பட்டு மீண்டும் திறக்கும் நிகழ்வு நேற்று (16) சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
நாட்டின் சுதந்திரத்துடன், இத்தாலியர்களின் தலையீட்டின் மூலம் அரசாங்க திரைப்படத் துறை தொடங்கப்பட்டது. 1948 முதல், அரசாங்க திரைப்படத் துறை, உள்ளூர் இயக்குநர்கள் மட்டுமின்றி, பல வெளிநாட்டு இயக்குநர்களின் படைப்புகளைப் பாதுகாக்கும் தேசியப் பொறுப்பை நிறைவேற்றி வருகிறது.


