All Stories

4.23 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்படும் புதிய பந்தகிரிய காலனி உப தபால் நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

"ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளுடன் கூடிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட அஞ்சல் சேவையை நவீனமயமாக்குவதற்கும், பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் விரைவான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிய பந்தகிரிய காலனி உப தபாலகக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று (20) காலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 4.23 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் நாட்டப்பட்டது.

4.23 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்படும் புதிய பந்தகிரிய காலனி உப தபால் நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பொத்துவில் ஆதார மருத்துவமனையில் ஒரு பில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மூன்று மாடி அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ வளாகக் கட்டிடம் பொதுமக்களுக்குத் திறக்கப்படவுள்ளது.

சீன அரசாங்கத்தின் உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் ஆதார மருத்துவமனையில் கட்டப்பட்ட மூன்று மாடி அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ வளாகக் கட்டிடத்தை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (19) திறந்து வைத்தார்.

பொத்துவில் ஆதார மருத்துவமனையில் ஒரு பில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மூன்று மாடி அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ வளாகக் கட்டிடம் பொதுமக்களுக்குத் திறக்கப்படவுள்ளது.

கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில 2025 செப்டெம்பர் 19 ஆம் திகதியில் இருந்து நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவினால் கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் ருவன் கலுபோவிலவிடம் நியமனக் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில நியமிக்கப்பட்டார்

வடக்கு கடலில் 33 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றினர்

யாழ்ப்பாணத்தின் மாமுனை கடல் பகுதிகளில் 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, முப்பத்து மூன்று (33) கிலோகிராமை விட அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றினர்.

வடக்கு கடலில் 33 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றினர்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 செப்டம்பர் 20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 செப்டம்பர் 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நேற்று (19) காலை நடைபெற்ற Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டார்.

Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்