All Stories

இலங்கை - சீன பௌத நட்புறவு சங்கத்தின் ஊடாக அனுராதபுரம் மஹவிலிச்சி பிரதேசத்திற்கு நீர் சுத்தீகரிப்பு நிலையம்

மஹவிலிச்சி பிரதேச செயலகத்தின் ஒயாமடுவ கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பெருங்குளம் கிராமத்தின் மைத்ரீ விகாரையில் அமைக்கப்பட்ட நீர் சுத்தீகரிப்பு நிலையம், மத அனுஷ்டானங்களுக்கமைய சீனத் தூதுவர் ஷே ஷென் ஹொன்னால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை - சீன பௌத நட்புறவு சங்கத்தின் ஊடாக அனுராதபுரம் மஹவிலிச்சி பிரதேசத்திற்கு நீர் சுத்தீகரிப்பு நிலையம்

இந்திய கடற்படைத் தளபதி இலங்கை பாதுகாப்பு தலைவர்களை சந்தித்தார்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி Admiral Dinesh K. Tripathi, நேற்று (செப்டம்பர் 22) இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்திய கடற்படைத் தளபதி இலங்கை பாதுகாப்பு தலைவர்களை சந்தித்தார்

பாடசாலை சார்ந்த செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்துவது, கல்விச் சீர்திருத்தங்களின் நோக்கமாகும்.


- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இந்து சமய ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி
ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

பாடசாலை சார்ந்த செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது கல்வி சீர்திருத்தங்களின் நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, மாணவர்கள் செயல்பாடு சார்ந்த கல்வி முறையை நோக்கி நகரும்போது, ​​பாடசாலைகளில் மதக் கல்வியும் எதிர்காலத்தில் செயல்பாடு சார்ந்ததாக மாறும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இந்து மதம் பாடத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாகவும், இதை நிவர்த்தி செய்ய ஒரு தீர்வு தேவை என்றும் இந்து சமய ஆலோசனைக் குழு சுட்டிக்காட்டியது. இதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போது அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதால், அது முடிந்த பிறகு முறையான திட்டத்தின்படி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் சமநிலைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

தற்போது செயல்படாது உள்ள இந்து மாணவர் சங்கங்களை மீண்டும் செயல்படுத்தி பராமரிப்பது பொருத்தமானது என்று இந்து சமய ஆலோசனைக் குழுவினால் இங்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

பாடசாலை சார்ந்த செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்துவது, கல்விச் சீர்திருத்தங்களின் நோக்கமாகும்.

ஜனாதிபதி தலைமையில் மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்

நாட்டின் வலுசக்தி இறையாண்மைக்காக அரசாங்கம் தொடர்ந்து முன்நிற்கும் எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை

- ஜனாதிபதி

ஜனாதிபதி தலைமையில் மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 செப்டம்பர் 23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 செப்டம்பர் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு புறப்பட்டார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.

செப்டெம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொண்டார்.

.

 

 

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு புறப்பட்டார்