மஹவிலிச்சி பிரதேச செயலகத்தின் ஒயாமடுவ கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பெருங்குளம் கிராமத்தின் மைத்ரீ விகாரையில் அமைக்கப்பட்ட நீர் சுத்தீகரிப்பு நிலையம், மத அனுஷ்டானங்களுக்கமைய சீனத் தூதுவர் ஷே ஷென் ஹொன்னால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

மஹவிலிச்சி பிரதேச செயலகத்தின் ஒயாமடுவ கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பெருங்குளம் கிராமத்தின் மைத்ரீ விகாரையில் அமைக்கப்பட்ட நீர் சுத்தீகரிப்பு நிலையம், மத அனுஷ்டானங்களுக்கமைய சீனத் தூதுவர் ஷே ஷென் ஹொன்னால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி Admiral Dinesh K. Tripathi, நேற்று (செப்டம்பர் 22) இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இந்து சமய ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி
ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
பாடசாலை சார்ந்த செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது கல்வி சீர்திருத்தங்களின் நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, மாணவர்கள் செயல்பாடு சார்ந்த கல்வி முறையை நோக்கி நகரும்போது, பாடசாலைகளில் மதக் கல்வியும் எதிர்காலத்தில் செயல்பாடு சார்ந்ததாக மாறும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இந்து மதம் பாடத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாகவும், இதை நிவர்த்தி செய்ய ஒரு தீர்வு தேவை என்றும் இந்து சமய ஆலோசனைக் குழு சுட்டிக்காட்டியது. இதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போது அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதால், அது முடிந்த பிறகு முறையான திட்டத்தின்படி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் சமநிலைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
தற்போது செயல்படாது உள்ள இந்து மாணவர் சங்கங்களை மீண்டும் செயல்படுத்தி பராமரிப்பது பொருத்தமானது என்று இந்து சமய ஆலோசனைக் குழுவினால் இங்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
நாட்டின் வலுசக்தி இறையாண்மைக்காக அரசாங்கம் தொடர்ந்து முன்நிற்கும் எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை
- ஜனாதிபதி
2025 செப்டம்பர் 23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 செப்டம்பர் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.
செப்டெம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொண்டார்.
.
2442 இலக்க 2025.06.20 திகதிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, இலங்கை பொலிஸ் சேவையின் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கொஸ்தாபில் பதவிக்காக அதிகாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான எழுத்துப் பரீட்சை 2025.10.04 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 07பரீட்சை மத்திய நிலையங்களில் 7036 பரீட்சார்த்திகளுக்காக நடைபெறவுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க திகாமடுல்லையில் நடைபெறும் வருடாந்திர எசல மகா பெரஹெராவின் ஆரம்ப நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரும் கலந்துகொண்டார்.
வரலாற்று சிறப்புமிக்க திகாமடுல்ல வருடாந்திர எசல மகா பெரஹெரா - 2025, அம்பாறை விஹாரையில் இருந்து (19) சுப நேரத்தில் தொடங்கியது.
ஊர்வலத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கிராமப்புற மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் துணை அமைச்சர் எல்.ஜி. வசந்த பியதிஸ்ஸ ஆகியோர், அம்பாறை விஹாரையில் நடைபெற்ற மத விழாக்களில் இணைந்து, அமரபுர கல்யாணிவம்சிக நிகாயவின் கிழக்கு மாகாணத்தின் துணைத் தலைமை பீடாதிபதி வணக்கத்திற்குரிய சுஹந்தகம சீலரத்ன தேரரின் அறிவுறுத்தலின் பேரில், கலசத்தை யானை மீது வைப்பதில் பங்கேற்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க திகாமடுல்ல எசல பெரஹெரா (19) அன்று அம்பாறை விஹாரையில் இருந்து ஊர்வலம் தொடங்கும், இன்று அதன் கடைசி நாளாகும், 03 நாட்கள் நீடிக்கும். இந்த ஆண்டு, பெரஹெரா 16 வது தடவையாக நடைபெறுகிறது, மேலும் உள்ளூர்வாசிகள் உட்பட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, சர்வதேச சிறுவர் தினத்துடன் இணைந்து, தொழில் திணைக்களத்தின், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரிவு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதன் கீழ், இன்று (22) யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறைக்கான விரிவான தேசியக் கொள்கையை உருவாக்கும் நோக்கத்துடன், உயர்கல்வி கொள்கை மேம்பாட்டுக்கான தேசியக் குழு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் கூடியது.
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று (22) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறுகிறது.
தேசிய நீர்வாழ் சூழல் அமைப்பிற்கும், உள்ளூர் மீன் வளத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ‘ஜெயன்ட் ஸ்னேக்ஹெட்’ (Giant Snakehead) எனும் ஆக்கிரமிப்பு வெளிநாட்டு மீன் இனத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்ட "தெதுரு ஓயா மீன்பிடிப் போட்டி 2025", சனிக்கிழமை (செப்டம்பர் 20) தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மிகவும் வெற்றிகரமாக நிறைவுற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]