தேசிய இளைஞர் விளையாட்டு விழா போட்டியின் தேசிய அளவிலான அணி போட்டிகள் நேற்று (26) வத்துபிட்டிவல விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின.

தேசிய இளைஞர் விளையாட்டு விழா போட்டியின் தேசிய அளவிலான அணி போட்டிகள் நேற்று (26) வத்துபிட்டிவல விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின.
தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான சமுத்திர சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடன உடன்படிக்கையில் (BBNJ) 60 ஆவது உறுப்பு நாடு இணைந்ததை முன்னிட்டு, பிரான்ஸ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, (25) ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் அரச தலைவர்களின் பங்கேற்புடன் நியுயோர்க் நகரில் நடைபெற்றதுடன், இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அதில் கலந்து கொண்டார்.
இன்று (27) உலக சுற்றுலா தினம் ஆகும். இந்த ஆண்டு இதன் கருப்பொருள் "சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்" என்பதாகும். உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) இந்த நாளை 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமித்தது, அதன் கொண்டாட்டம் 1980 இல் ஆரம்மிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் நிர்வாகக் கொள்கைக்கு இணங்க, பல அரசு நிறுவனங்கள் தற்போது தங்கள் பணிகளை மேற்கொள்ள தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. அதன்படி, அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு படியாக 'GovPay' கட்டண வசதி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அனைத்து இலங்கை மாணவர்களுக்கும் அனைத்து கலாச்சாரங்களிலும் காணப்படும் அழகியல் பாடங்களைப் பற்றிய எளிய புரிதலையும் அங்கீகாரத்தையும் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதனூடாக, பரஸ்பர மரியாதை மற்றும் உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என்று,இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவில் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவைகளை நெருக்கமாகக் கொண்டுவரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத் திட்டத்தின் முதல் மையம், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நேற்றறு (26) காலி மாவட்டத்தின் மாபலகமவில் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
2025 செப்டம்பர் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படும் உலக முதியோர் தினத்துடன் இணைந்த வகையில், இலங்கையில் முதியோருக்கான தேசியக் கொள்கையை (2025-2035) வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று (26) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பித்தார் .


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]