"ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளுடன் கூடிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட அஞ்சல் சேவையை நவீனமயமாக்குவதற்கும், பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் விரைவான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிய பந்தகிரிய காலனி உப அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் கடந்த (20) காலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 4.23 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் நாட்டப்பட்டது.


