தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக சேவையாற்றிய (CNI) மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய இன்று (அக்டோபர் 27) தனது 60வது வயது பூர்த்தியானதையிட்டு அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
களனி மானெல்கம கழிவு சேகரிப்பு நிலையத்தின் பணிகளை மேற்பார்வை செய்யும் விஜயமொன்றை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழுவினர் அண்மையில் (26) மேற்கொண்டனர்.
அனர்த்தத்துக்குள்ளான INTEGRITY STAR (MV) எனும் வணிகக் கப்பலில் இருந்த பணியாளர்களினால் விடுக்கப்பட்ட அவசர அழைப்பொன்றிற்கமைய விரைவாக செயல்பட்ட இலங்கை கடற்படையினர், குறித்த கப்பலில் இருந்த பணியாளர்களை அக்டோபர் 25ஆம் திகதி பாதுகாப்பாக மீட்டெடுத்த நிலையில் இன்று (அக்டோபர் 26,) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஒக்டோபர் 26ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது கடந்த 6 மணித்தியாலங்களில் மணித்தியாலத்துக்கு 10 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து, இன்று ஒக்டோபர் 26ஆம் திகதி முற்பகல் 0530 மணிக்கு அதே பிராந்தியத்திற்கு மேலாக வட அகலாங்கு 11.10N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.20E இடையில் திருகோணமலைக்கு வடகிழக்காக சுமார் 720 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
2025 ஒக்டோபர் 27ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2025 ஒக்டோபர் 26ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வடமேல் மாகாண நிகழ்ச்சித் திட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன ஆகியோரின் தலைமையில் இன்று (26) காலை வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


