நாட்டின் அரசாங்க வைத்தியசாலை அமைப்பின் முதன்மை மருத்துவமனையான இலங்கை தேசிய மருத்துவமனையில், ஜப்பானிய அரசாங்கத்தாலும் ஜப்பானிய மக்களாலும் வெளிநோயாளர் பிரிவு, நோயறிதல் மையம், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டஉபகரணங்களை ஆய்வு செய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா (H.E. Akio Isomata) உள்ளிட்ட ஜப்பானிய பிரதிநிதிகளால் சமீபத்தில் விசேட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


