ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவுக்கு வருகை தந்தது
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' இன்று (2025 அக்டோபர் 28,) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ இன்று (2025 அக்டோபர் 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலை வரவேற்றனர்.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்களுக்காக செயல்படுத்தப்படும் 'Vision' தொடர் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக, கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று (28) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகன விபத்துகள் அதிகரித்து வருவதன் காரணமாக உயிரிழப்புகள் மற்றும் பாரிய காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கும் நோக்குடன், 2025-09-25 ஆம் திகதியிடப்பட்ட 2455/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டின் இல. 2 மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலைகள்) கட்டளைகள் திருத்தப்பட்டுள்ளன.
தேயிலைத் தொழிலில் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவர்களுடனான விசேட கூட்டம் அண்மையில் (26) நுவரெலியா நகர மண்டபத்தில் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் திர சமந்த வித்யாரத்னவின் தலைமையில் நடைபெற்றது.
உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme - Sri Lanka) இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் (Philip Ward) மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் (Robert Oliver) ஆகிய இருவரும் இன்று (27) பிரதமரின் அலுவலகத்தில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்தனர்.
1968ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வரும் உலக உணவுத் திட்டம் (WFP), இலங்கையில் உணவுப் பாதுகாப்பு, போசாக்குப் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் தாங்குதன்மை (Resilience) ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஆதரவை வழங்கி வருகிறது.
2023 - 2027ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) வியூகத் திட்டம் (Strategic Plan) மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குப் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டத்திற்கமைய உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. எம்.எச்.ஏ.எம். ரிஃப்லான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
"ஊழலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் நேர்மை மற்றும் நெறிமுறைசார் நடத்தையின் பொருத்தப்பாடு" குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்று, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவால் அக்டோபர் 23 ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் வளாகத்தில் நடாத்தப்பட்டது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
