மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய அமைக்கப்பட்டுள்ள "பிராந்திய கைத்தொழில் சேவைக் குழு" மூலம் மற்றும் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள "அமைச்சுக் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழு" மூலம் கைத்தொழில் பேட்டைகளுக்காக முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய குடியரசு அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று (09) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் கையெழுத்தானது.
கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் நோயாளி சிகிச்சை சேவைகளை வலுப்படுத்த ஒரு MRI இயந்திரம்.
மருந்துகளுக்கான கொள்முதல் செயல்பாட்டில் சில மாற்றங்களைச் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் பாடசாலைகள் மத்தியில் 100 புத்தாக்க சங்கங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன ஆகியோரின் தலைமையில் செப்டெம்பர் 8ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1,604,018 வரை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 37,495 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது.
இந்தியா, ஐக்கிய இராஜ்ஜியம், ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அதிகளமான சுற்றுலா பகுதிகள் வருகை தந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025 செப்டம்பர் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2025 செப்டம்பர் 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 செப்டம்பர் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வௌியிடப்பட்டுள்ளது.
உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, செப்டம்பர் 8 அன்று பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]