காலி, மாத்தறை,களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை,மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலி, மாத்தறை,களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை,மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Marc - Andre Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பெப்ரவரி 04 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.
கொலன்னாவை வெள்ளத்தினைக் கட்டுப்படுத்துவதற்காக சிபாரிசுகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட சிபரிசுகள் மற்றும் அதற்கு இணங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (4) இடம்பெற்றது.
இம்முறை 2025 றமழான் (ராமசான்) காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும் (துஐஊயு) இடையிலான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மன்னார் மாவட்ட மருத்துவமனையில் திடீர் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டுமானம் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரையில் நாட்டில் சுமார் 5,459 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
'தேசிய மறுமலர்ச்சி' என்ற தொனிப்பொருளில் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையினர் 25 தடவைகள் துப்பாக்கி சூட்டு வணக்கங்கள் செலுத்தி நாட்டுக்கு மரியாதை செலுத்தினர். மேலும் கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில், இன்று (2025 பெப்ரவரி 04) மதியம் 1200 மணி அளவில் சயுர கப்பலின் கட்டளை அதிகாரி,கெப்டன் சந்தன பிரியந்தவினால் வழிநடத்தப்பட்டது.
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான 'KRI DIPONEGORO - 365' என்ற போர்க்கப்பல் நேற்று (2025 பெப்ரவரி 04,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 03) சந்தித்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]