பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 20 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 20 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
இதற்கு முன்னர் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது காணப்பட்ட அரசியல் செல்வாக்கு தற்போதைய அரசாங்கத்தில் இருக்காது என்றும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்தும் போது, அதற்கு அவசியமான முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிரந்தரத் தீர்வொன்றை அடுத்த வருடத்தில் தயாரித்து முடிக்க வேண்டும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறிப்பிட்டார்
குறுங்காலத் தீர்வு ஒன்றின் ஊடாக வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விடை கிடைக்காது என்றும், இயற்கை அனர்த்த நிலைமை என்பது மனிதர்களுக்கு கட்டுப்படுத்த முடியாதது எனவும், அவற்றுக்கு முகம் கொடுப்பதற்காக நிரந்தரத் தீர்வைத் தேடிக்கொள்ளும் பொறுப்பு காணப்படுவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக பொதுமக்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக அவதானத்தை செலுத்த வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தற்காலிகத் தீர்வாக கால்வாய்கள், ஆறுகள் மற்றும் வடிகான் கட்டமைப்பு என்பவற்றை சுத்தப்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் செயற்பட்ட திட்டத்தின் முன்னேற்றக் கலந்துரையாடலின் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடல் அண்மையில் (19) அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இடம் பெற்றது. கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக குறுங்காலத் தீர்வாக ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகான் கட்டமைப்புக்களை சுத்தம் செய்யும் திட்டத்திற்காக 19 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி உப வேலை திட்டங்கள் 19 நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அவற்றில் 12 திட்டங்கள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.
மேலும் ஏழு உப திட்டங்களை முடிவுறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இத்திட்டங்களை முடிவுறுத்துவதற்கான காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும். அச்செயற்பாடுகளை டிசம்பர் 31-ஆம் திகதிக்கு முன்னர் முடிவுறுத்தலாம் எனவும் அந்த அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட மத்திய நிலையத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அவ்வாறே கொலன்னாவை நகர சபை, கொடிகாவத்த முல்லேரியா பிரதேச சபை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப் படுத்திய கொலன்னாவை மற்றும் கொடிகாவத்தை முல்லேரியா உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.
அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கல்விச்சேவைக் குழுவின் அறிவித்தலுக்கு இணங்க, தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்றதாக, இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உலகில் முதன்முறையாக 100 சிறப்புப் பயிற்சி பெற்ற வர்த்தக நாம தூதர்கள் (brand ambassador) குழுவொன்று நேற்று (19) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் தன்னார்வ சேவைக்காக நியமிக்கபட்டது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 19 டிசம்பர் 2024 அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் நம்பிக்கை பயிற்சி வலயத்தை திறந்து வைத்துடன் இது குடாஓயா கமாண்டோ பயிற்சி பாடசாலையில் கமாண்டோ படையணியின் பயிற்சி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த வசதி இராணுவத்தின் நவீனமயமாக்கல் முயற்சிகளையும் குறிக்கிறது, ஏனெனில் இது இலங்கை இராணுவத்திற்கு ஒரு தனித்துவமான மற்றும் புதுமையானது இது பிராந்திய மட்டத்தில் கூட அரிதாகவே காணப்படுகிறது.
வருகை தந்த இராணுவ தளபதியினை 53 வது காலாட் படைப்பிரிவு தளபதியும் கமாண்டோ படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்கிரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்றார். கமாண்டோ படையணி படையினரின் சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து பயிற்சி வலயத்தை முறைப்படி திறந்து வைத்துடன் பெயர் பலகையினை இராணுவத் தளபதி திறைநீக்கம் செய்து வைத்தார்.
கமாண்டோக்களின் சின்னமான மெரூன் தலைகவசத்தினை பெற்றுக்கொள்வதில் ஒரு முக்கிய சவாலான நம்பிக்கை சோதனைத் பாய்ச்சலை எளிதாக்குவதற்கு நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயம் நிறுவப்பட்டது, இதன் மூலம் கமாண்டோ பயிற்சி பாடசாலையின் பயிற்சி உட்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்துகிறது.
இந்த திட்டம், ஆரம்பத்தில் மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் கமாண்டோ படையணி படைத்தளபதியாக பதவி வகித்த காலத்தில் முன்மொழியப்பட்டதுடன், தளபதியின் சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது. கமாண்டோ பயிற்சி பாடசாலையின் தளபதி மற்றும் சிப்பாய்களின் ஒத்துழைப்புடன், பொறியியல் சேவைகள் படையணியின் நிபுணத்துவத்தின் மூலம் நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயம் வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டது.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்திரை மாவட்டங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21) காலை 5.30 மணிக்கு வெளியிட்ட காலநிலை எதிர்வகூறல் தொடர்பான அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அதனையடுத்து மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
அதனையடுத்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர், பிரதி பதிவாளர் வண. நாரம்பனாவே ஆனந்த தேரர்,முதியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண.முருத்தெனியே தம்மரத்தன தேரர் உள்ளிட்டோர் இதன்போது வருகை தந்திருந்ததுடன் அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு ஆசி வழங்கினர்.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2024-12-20
எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது எனவும், எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
இருப்பினும், இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளதெனவும் தெரிவித்தார்.
சரிவடைந்திருக்கும், கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை தனக்கு இல்லை எனவும், கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே தனக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு , தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி
வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றதென கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது இந்திய விஜயத்தின் போது 1500 அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது என்றும் கூறினார்.
அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளதாகவும், எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால், அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால், அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மக்கள் ஆணையின் 80% எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வௌிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில், அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே, இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல என்பதையும் இரண்டும் இணக்கமான குழுக்கள் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதன்படி, அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வௌிப்படுத்தியிருப்பதால், இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன் உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு, புதிய வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் 'Clean Srilanka' திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல், சமூகத்தை கருத்தியல் ரீதியாக மாற்றியமைத்தல் என்ற மூன்று துறைகளின் கீழ் 'Clean Srilanka' ஊடாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அந்த பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம், அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால், அந்த நபரின் பாதுகாப்பிற்காக தாம் முன் நிற்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபயரத்ன, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார, மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2024.12.20
தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சரியான முறைமைகளை உருவாக்குங்கள்
பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளி இல்லாமலாக்கப்பட வேண்டும்
சகல துறைகளிலும் பணியாற்றும் வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக திருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மூளை சுகாதார வாரம் 2024 இன் ‘ஆதரவு தினம்’ நேற்று (டிசம்பர் 19) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) நடைபெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]