All Stories

கொரியா விடமிருந்து சிகிரியாவிற்கு 2.4  பில்லியன் ரூபா நிதியுதவி

சிகிரியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி சுற்றுலா பாதுகாப்பை அதிகரிப்பதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனம் (KOICA) விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு யோசனை முன் வைத்துள்ளது. 

கொரியா விடமிருந்து சிகிரியாவிற்கு 2.4  பில்லியன் ரூபா நிதியுதவி

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க அதிகபட்ச முயற்சிகளை எடுத்து வருகிறோம் - பாதுகாப்புச் செயலாளர்

புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் நமது பாதுகாப்புப் படைகளை நவீனமயப்படுத்த அதிகபட்ச முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தெரிவித்தார்.

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க அதிகபட்ச முயற்சிகளை எடுத்து வருகிறோம் - பாதுகாப்புச் செயலாளர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன அரசினால் உலர் உணவு பொதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு சீன அரசினால் வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் அடங்கிய ஒரு தொகுதி நேற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன அரசினால் உலர் உணவு பொதிகள்

இன்றைய வானிலை அறிக்கை

நாளையிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

2025 ஆம் ஆண்டிலிருந்து கறுவாவிற்கு அதிக மதிப்பு

நாட்டின் பிரதான  ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெற்றிக தொன் வரை என்பதுடன் அதில் 19,000 மெற்றிக் தொன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கையிலிருந்து இலத்தீன் அமெரிக்க வலய நாடுகளுக்கு அதிகமாகக் கறுவா ஏற்றுமதி செய்யப்படுவதுடன் அவை 60% ஆனவை ஆகும். இவற்றில் மெக்சிகோ முன்னணி வகிக்கிறது.

கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர குறிப்பிடுகையில்; தற்போது கறுவா ஏற்றுமதியினால் இலங்கைக்கு வருடத்திற்கு 250மில்லியன் டொலர் வெளிநாட்டு செலாவணி கிடைக்கிறது.

அது தவிர இலங்கையின் பிரதான பெருந்தோட்டப் பயிராக கறுவா உற்பத்தியை முன்னேற்றுவதற்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி இதுவரை கிடைக்கப்பெற்ற வருமானத்தை இரு மடங்குகளாக அதிகரிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

2025 ஆம் ஆண்டிலிருந்து கறுவாவிற்கு அதிக மதிப்பு