All Stories

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

கொழும்பு மகாநாம கல்லூரி மற்றும் பொலன்னறுவை தம்மின்ன கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர்

கொழும்பு மகாநாம கல்லூரி மற்றும் பொலன்னறுவை தம்மின்ன மகா வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தால் அவர்களின் கல்விச் சுற்றுலாவுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று (22) வாய்ப்பு கிடைத்தது.

கொழும்பு மகாநாம கல்லூரி மற்றும் பொலன்னறுவை தம்மின்ன கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர்

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் கோகரெல்லவில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்கள் பாவனகை்கு..

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன், விங் கமாண்டர் (ஓய்வு) புலஸ்தி வீரசிங்க மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் நிதி உதவியுடன், குருநாகல், கோகரெல்ல, ஹிதான, ஸ்ரீ விமலராம புராண விஹாரையில் நிறுவப்பட்ட மறுசுழற்சி நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 ஜூலை 16 ஆம் திகதி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் கோகரெல்லவில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்கள் பாவனகை்கு..

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கல்பிட்டியில் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 17 ஆம் திகதி கல்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் மீன்பிடி படகொன்றையும் (01) கைது செய்தனர்.

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கல்பிட்டியில் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இரண்டு வார காலப்பகுதியில் கடற்படை நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருட்களுடன் 10 சந்தேக நபர்கள் கைது.

இலங்கை கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை ஆகியவை 2025 ஜூலை 05முதல் 19 வரை கடுகண்ணாவ, அலதெனிய, தவுலகல, கம்பஹா, கட்டுநாயக்க, நிலாவெளி, திருகோணமலை மற்றும் மன்னார், நடுகுடா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, பத்து (10) கிராம் நாற்பது (40) மில்லிகிராம் ஐஸ், பதினோராயிரத்து எண்ணூற்று அறுபது (11860) வெளிநாட்டு சிகரெட்டுகள், இருநூற்று அறுபத்து நான்கு (264) மாத்திரைகள் மற்றும் முப்பத்து மூன்று (33) மாத்திரை போத்தல்கள், ஐந்து (05) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் குஷ் போதைப்பொருள்கள், நூற்று நான்கு (104) கிராம் கேரள கஞ்சாவுடன் பத்து (10) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

இரண்டு வார காலப்பகுதியில் கடற்படை நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருட்களுடன் 10 சந்தேக நபர்கள் கைது.

“She Can Sail the Seas” திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்த 09 பெண் கெடட்டுகளுக்கு நியமனக் கடிதங்கள்

Centrum Marine மற்றும் Perter Dohle Schiffahrts – KG இணைந்து செயல்படுத்திய “She Can Sail the Seas” திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்த 09 பெண் க​ெடட்டுகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவாக்குவின் தலைமையில் நடைபெற்றது.

“She Can Sail the Seas” திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்த 09 பெண் கெடட்டுகளுக்கு நியமனக் கடிதங்கள்