போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (18) பதுளை புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் ஈடுபட்டார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (18) பதுளை புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் ஈடுபட்டார்.
கொழும்பு, 2025 ஜூலை 19 – தீவைச் சுற்றி நிலவும் மோசமான வானிலை காரணமாக புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அனைத்து மீனவ சமூகங்களையும் கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்களம் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறது.
தொழிலாளர் அமைச்சின் வேண்டுகோளின் பேரில், திருகோணமலை மாவட்டத்தில் தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பாக சம்பந்தப்பட்ட வணிகர்களுடன் கலந்துரையாடல் நேற்று (18) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
கண்டி வித்யாலோக, வெரங்கெடகொட வித்யாலோக மற்றும் திகம்பதஹ கனிஷ்ட பாடசாலை என்பவற்றின் மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு (18) கிடைத்தது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
தேயிலைத் துறையின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புக்கு இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்
புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
உடவளவ யானைகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 06 யானைகளை உடவளவ சரணாலயத்திற்கு விடுவிக்கும் பணி நேற்று (17) சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி தலைமையில் நடைபெற்றது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள் மின்சக்தி துறைக்கு வழங்கும் முதலீட்டை விரிவுபடுத்துவதே எமது அரசாங்கத்தின் திட்டம் என்று வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
"தெஹிவளை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பின்மைக்கு தீர்வாக, அதைச் சுற்றியுள்ள மதிலை விரிவுபடுத்துதல், ரயில் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரயில் மூலம் பொருட்களை கொண்டு செல்வதை எளிதாக்குதல், மாற்றுத்திறனாளிகள் ரயில் பயணிகளுக்கு வசதிகளை வழங்குதல் மற்றும் அடையாளம் காணப்பட்ட பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்
கட்டுமானத்தின் இறுதி கட்டத்தில் உள்ள மொரகொல்ல நீர்மின் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் மகாவலி ஆற்றில் கட்டப்படும் கடைசி நீர்மின் திட்டமாகக் கருதக்கூடிய மற்றும் தேசிய மின் கட்டமைப்பில் 30.2 மெகாவாட் திறனைச் சேர்க்கும் கொத்மலே புதிய பொல்பிட்டிய 220kV/132kV மின் உற்பத்தி பாதையின் கட்டுமானப் பணிகளை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அண்மையில் (13) ஆய்வு செய்தார்.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூலை 18ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]