வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், வீடமைப்புத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (12.06.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (12.06.2025) மு. ப. 11.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய போரா சமூகத்தினரின் ஆன்மீக மாநாடு மற்றும் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவசியமான முழுமையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (13) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் நான்கு சாட்சிகள் நேற்றையதினம் (11) சாட்சியமளித்தனர்.
கடந்த 2024 சிறு போகத்துடன் சம்பந்தப்பட்ட சகல இழப்பீடுகளும் தற்போது செலுத்தப்பட்டு நிறைவடைந்துள்ளதாக கமநலக் மற்றும் விவசாயக் காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக, பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த, கந்தளாய் சீனி தொழிற்சாலையின் 2000 ஏக்கர் விவசாய நிலம், சோள செய்கைக்காக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
தற்போதைய குழந்தைகள் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர் இது சம்பந்தமாக, பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ
ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,11 பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார்.
வரலாற்று முக்கியத்துவமிக்க திஸ்ஸமஹாராம ரஜமகா விஹாரையின் ரந்தோலி பெரஹர வீதி உலா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அதிதிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று (10) இரவு ஆரம்பமானது.
நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயிரிடப்படாத நிலங்களில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.


