உள்நாட்டில் அவசியமான தரத்திலான சோளம் பெற்றுக் கொள்வதற்கு காணப்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு, திரிபோச உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்வதற்காக வருடத்திற்கு அவசியமான உரிய தரத்துடனான சோளத்தை ஸ்ரீலங்கா திரிபோஷ வரையறுக்கப்பட்ட நிறுவனத்தினால் இறக்குமதி செய்வதற்காக, இறக்குமதி அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நேற்று (02) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வரகாபொல பிரதேச செயலகத்தின், கலபிட்டமட பிரதேசத்தில், இறப்பிடிகல தொடக்கம் ஹப்புகொட வரை பாய்ந்து செல்லும் நீரோடை 2.5 கிலோமீற்றர் பகுதியில் நீரோடையின் மத்தியிலிருந்து இருமருங்கிலும் பதினைந்து (15) மீற்றர்கள் வரையான நிலப்பரப்பு நிக்கந்துபொல சரணாலயமாக பிரகடனப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025 ஆண்டிலிருந்து அமுலாகும் வகையில் நிரந்தர வீடமைப்பு திட்ட பயனாளி நிர்மாணிக்கும்அடிப்படையில் அரசினால் வழங்கப்படும் உதவிப் பணத்தை; அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
2025 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வை முன்னிட்டு இடம்பெற்ற நில் கலா பனா பகுதியை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நேற்று (03) ரத்துகல ஆதிவாசிகள் மக்கள் பாரம்பரிய மத்திய நிலையத்தில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் ஐஐஐ ஆம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள தரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும், கருத்திட்டக் காலப்பகுதியை 2027 வரைக்கும் நீடிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுளளன.
திருகோணமலை புறா தீவுப் பகுதியில் நேற்று (02) முற்பகல் கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத 2 திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது - கோப் குழுவில் புலப்பட்டது
🔸 மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சட்ட திட்டங்கள் பாராளுமன்றத்தில் முறையாகவும், விரைவாகவும் நிறைவேற்றுவதற்கான பொறுப்பு அரசாங்க அதிகாரிகளுக்குரியது
மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றாத, விரயமாக்காத அரசியல் முன்மாதிரியை நாம் உருவாக்கி இருக்கிறோம்
மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
தென் கொரியாவின் குமியில் 2025 மே 27 முதல் 31 வரை நடைபெற்ற 26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் தமது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினர்.
புத்தளம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித-யானை மோதலைத் தணிப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிவது குறித்து கலந்தாலோசிக்க, பொது நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தலைமையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களின் பங்குபற்றலுடன் ஜூன் 2 கொழும்பு 5, நாரஹேன்பிட்டை நில மெதுரவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.


