தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் (மே மாதம் 03 மற்றும் 04) இரண்டு நாட்கள் ஒலிவிலில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் (மே மாதம் 03 மற்றும் 04) இரண்டு நாட்கள் ஒலிவிலில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வருடாந்த புதிய தேயிலை விழா நேற்று (13) எட்டாவது தடவையாக பதுளை முதியங்கன ரஜ மகா விஹாரையில் இடம்பெற்றது.
150 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இலங்கை தேயிலை கைத்தொழிலின் பிரதான கலாச்சார பாரம்பரியமான இந்த விழாவிற்கு தேயிலையை உற்பத்தி செய்யும் மாவட்டங்களை உள்ளடக்கியதான தொழிற்சாலை உரிமையாளர்கள், தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தேயிலைத் துறையுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் பங்கேற்றனர்.
கொத்மலை,கெரண்டி எல்ல பிரதேசத்தில் நடந்த பஸ் விபத்தில் பெருமளவானவர்கள் சிகிச்சைக்காக கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வைத்தியசாலையின் தூய்மையாக்கல் பணிகளுக்காக “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம் வலுவாக கைகோர்த்துக்கொண்டுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள அனைத்து பிராந்திய மருத்துவமனைகளும் வட மாகாண சபையின் ஆதரவுடன் ஐந்தாண்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மாகாணத்தில் வாழும் கிராமப்புற மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பு, ஹுணுபிட்டியவில் உள்ள கங்காராமய விகாரையும், ஜனாதிபதி செயலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே மாதம் 12 ஆம் திகதி திறந்து வைத்தார்.
மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இருநூற்று பதினெட்டு (218) கிலோகிராம், எண்ணூறு (800) கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு (01) டிங்கி 2025 மே 11 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ சுகாதார மற்றும வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் முதற்கோலாசானுமான (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவுசெய்யப்பட்டார்.
2569/2025 ஸ்ரீ புத்த வருட வெசாக் வாழ்த்துச் செய்தி
புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, பௌத்த தத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து புத்தபெருமானை வழிபட இலங்கையின் பௌத்த மக்கள் ஒன்றுகூடும் இந்த வெசாக் காலத்தில், நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வெசாக் வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இன்றைய வெசாக் தினத்தை முன்னிட்டு தனது செய்தியை வெளியிட்டுள்ளார்.

கொத்மலை கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று (10) ஆரம்பமாகிய அரச வெசாக் விழாவையொட்டி, விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தவும், நுவரெலியா நகரில் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காகவும் "கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் சிறப்பு நிகழ்ச்சியை செயல்படுத்தியுள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]