கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீபாலி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீபாலி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2025 ஜனவரி 27, அன்று, யாழ்ப்பாணத்தின் வெல்வெட்டித்துறைப் பகுதியிலிருந்து இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த ஏராளமான இந்திய மீன்பிடிக் கப்பல்களை வடக்கு கடற்படைக் கட்டளை அவதானித்து, அந்த கட்டளைக்கு சொந்தமான கடற்படையின் கப்பல்களை அனுப்புவதன் மூலம் அந்த மீன்பிடி படகுகளை நாட்டின் கடல் எல்லையில் இருந்து அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு குறித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு மீன் வளங்களை சேகரித்துக்கொண்டிருந்த பதின்மூன்று (13) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகொன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
இலங்கை பல்கலைக்கழகங்களை உலக தரப்படுத்தல் சுட்டிகளில் உயர்த்தி வைத்தல் மற்றும் சர்வதேசமயப்படுத்தலுக்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அரிசிக்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கத்தின் எவ்வித தயார்படுத்தல்களும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர், வெகுஜன ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இஸ்ரேல் நாட்டில் தொழில் புரிபவர்களை வாரத்திற்கு ஒரு தடவை கண்காணிப்பதற்கு நடவடிக்கை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க
பண்டிகை காலத்தில் முஸ்லிம்களுக்காக குறைந்த விலையில் பேரித்தம் பழங்களை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவை தீர்மானமாக பேரீத்தம் பழங்களுக்காக விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரை நேற்று (28) கல்வி அமைச்சில் சந்தித்தார்.
மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவில் தம்பராவ சங்கபோ பிளேஸ் நலன்புரி சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட "சங்கபோ நூலகம்", மஹியங்கனை பிரதேச செயலாளரின் தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் சிறந்த விவசாய நடைமுறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கை மற்றும் இந்தியா விற்கிடையே உயர் கல்வி ஒத்துழைப்புத் தொடர்பாக நீண்ட வரலாறு காணப்படுவதாக உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
அத்தியவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இன்று (29) இரவு 9.00 மணி முதல் நாளை (30) மாலை 06.00 மணி வரையில் கீழே குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு 21 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இலங்கைக்கான மியன்மார் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜனவரி 28 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]