கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (30) முதல் வழங்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (30) முதல் வழங்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2025 சனவரி 28ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
பலாங்கொடை நகரின் மத்தியில் அமைந்துள்ள அதிக மதிப்புள்ள இரண்டு ஏக்கர் கொண்ட நிலப்பரப்பை சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பிகா ஜானகி ராஜரத்ன தெரிpவித்துள்ளார்.
பாராளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் திகதி கௌரவ சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.01.24ஆம் திகதி நடைபெற்றது.
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை கடந்த 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான முதன்மை பணிப்பகத்தின் பிரதி தலைவர் மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் இவனோவிச் ஜின்சென்கோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உயர்மட்ட ரஷ்ய இராணுவக் குழுவினர் பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் நடைபெற்ற செயல் திட்ட மாநாட்டில் பங்கேற்றனர்.
மழை நிலைமை:
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் தெற்குப் பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்காலத்தில் நாட்டிற்கு மிகவும் பெறுமதியான வளமாக மனித வளம் காணப்படுவதாகவும், அந்த மனித வளத்தின் தரத்தை உயர்த்துதல் மற்றும் முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தினார்.
தரமான உயர் தரத்திலான மருந்துகளை நாட்டின் அரச துறைக்கு வழங்குவதுடன் அம்மருந்துகளை நியாயமான விலையில் சந்தைக்கு வழங்குதல் மற்றும் மிகவும் பொறுப்புடன் மேற்கொள்வதற்காக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நில்வலா கங்கை தொடர்புடைய சுற்றுச்சூழல் பிரச்சினைகள், வெள்ளம் மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகள் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை முன்மொழிய மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நேற்று (28) கண்காணிப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், கடற்படை ஒழுக்காற்று பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 ஜனவரி 28 ஆம் திகதி, தலைமன்னாரம் ஊறுமலை கடற்படைத் தளத்தின் முன் கடற்கரையில் சதுப்புநில மரம் நடும் திட்டத்தை கடற்படையினர் மேற்கொண்டனர்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]