இலங்கை விமானப்படை (SLAF) தேசத்திற்கு ஆற்றிய பல தசாப்த கால சேவையை நினைவுகூரும் வகையில், அதன் 75வது ஆண்டு நிறைவு வரவேற்பு நிகழ்வை மார்ச் 03 நடத்தியது. அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தேசப்பற்றுடன் சேவையாற்றிய விமானப்படை வீரர்களின் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டாடும் வகையில், அத்திடியவில் உள்ள 'Eagles’ Lakeside' மண்டபத்தில் நேற்று மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது.
2026 மார்ச் 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மார்ச் 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக அரசாங்கம் பாரிய பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்தப் புதிய யுகத்திற்காக மக்களிடையே பரந்த சமூகப் பணிகளை ஆற்றிவரும் மகா சங்கத்தினரினதும் ஏனைய மதத் தலைவர்களினதும் வழிகாட்டல்களும், ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமானவை எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வித் துறைக்கான மனிதவள மேம்பாட்டுத் திட்டம் (HRDEP) குறித்துக் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அதிகாரிகளுக்கும் இடையில் மார்ச் மாதம் 2ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றது.
காப்புறுதி மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளை முகாமை செய்து புதிய பயிர்ச்செய்கைக் காப்புறுதி முறை ஒன்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் திட்டம் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 பெப்ரவரி மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 279,328 ஆகும்.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
