விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை (மார்ச் 15) காலை 8.00 - 8.05 மணிக்கு நடைபெற உள்ளது.

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை (மார்ச் 15) காலை 8.00 - 8.05 மணிக்கு நடைபெற உள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்கமுன்வரும் நிறுவனங்களை அடையாளங்காணும் நோக்குடனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான மற்றும் தற்காலிக, முழுநேர மற்றும் பகுதிநேர தொழிலுக்கான வாய்ப்புக்களை அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொடுக்கும் இலக்குடனும் 'தொழிற் சந்தை 2025' 12 ஆம் திகதி கலைப்பீடத்தில் நடைபெற்றது.
Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நில்வளா நதியை சுத்தப்படுத்தும் “SAVE NILWALA” திட்டம், மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் நேற்று (13) அக்குரஸ்ஸ பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
மனிதவளம் மற்றும் பௌதீகவளம் என்பன முழுமையாக கிடைத்தால் மாத்திரம் கல்வியில் மேம்பாடு அடைய முடியாது. எல்லோரதும் அர்ப்பணிப்பு முக்கியம். மாணவர்கள் ஆர்வத்துடன், விடாமுயற்சியுடன் கல்வியைக் கற்றால் மாத்திரமே முன்னிலைக்கு வரமுடியும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
முதலீடு இல்லாமல் எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. எமது மாகாணத்தை நோக்கி வருகின்ற முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்குகின்ற நிறுவனங்கள் நேர்சிந்தனையுடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்கின்ற "புத்த ரஷ்மி வெசாக் வலயம் 2025"தொடர்பான கலந்துரையாடல் மார்ச் 12ம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனுராதபுர மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலவிடுதி ‘அபிமன்சல-1’ க்கு 2025 மார்ச் 11 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார்.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 'தூய இலங்கை' திட்டத்திற்கமைய, 12,500 க்கும் மேற்பட்ட படையினர் 2025 பெப்ரவரி 20 முதல் 2025 மார்ச் 07 வரை 380 பாடசாலைகளில் சுத்தம் செய்யும் திட்டத்தில் ஈடுபட்டு புனரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று இன்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவன சீர்கேடுகளே இந்த நிலைக்கு காரணம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
ஒவ்வொரு துறையிலும் நாட்டுக்குத் தேவையான தலைவர்களை உருவாக்காமல் இந்த நாட்டை மாற்ற முடியாது என்ற உண்மையை அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே, கல்வித் துறையை சரியான திசைக்கு கொண்டுவர நாம் முன்னுரிமை அளித்து செயற்படுகிறோம்.
கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான முதல் கட்டமாக, உயர்கல்வி நிறுவனங்களுக்கு முழுமையடையாத உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யவும், வெற்றிடங்களை நிரப்பவும், தற்போதுள்ள பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தவும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.
கடந்த காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் விடுதி வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. அதற்கு நிதி அல்லது வேறு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மாணவர்களுக்கான விடுதிப் பிரச்சினைகளைத் தீர்க்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஹார்டி நிறுவனத்தைப் போலவே, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்துவம் உள்ளது. அந்த நிலையைப் பாதுகாத்து உயர்ந்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டும்.
பன்முகத்தன்மை கொண்ட பல நிறுவனங்கள் உள்ளன, அந்த நிறுவனங்கள் தங்கள் தனித்துவத்தைப் பாதுகாத்து இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
எதிர்காலத்தில் பாடசாலைக் கல்வியில் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை அளிப்போம். இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் ஹார்டி கல்வி நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.
உயர்கல்விக்குப் பின்னர், அதிக மாணவர்கள் தொழிற்கல்விக்கு செல்கின்றனர், எனவே, தற்போதைய தொழிற்சந்தைக்கு மட்டுமன்றி, எதிர்கால தொழிற்சந்தைக்கும், பொருத்தமான மனித வளத்தை உருவாக்குவது அவசியம்.
இந்த நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து நாம் திருப்தி அடைய முடியாது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவனங்களின் வீழ்ச்சியும் இதற்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு
அதிக மழையால் எதிர்வரும் காலங்களில் மாத்தறையில் ஏற்படக்கூடிய வௌ்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க விவசாய, கால்நடை வளங்கள்,காணி, நீர்ப்பாசன அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி,நிர்மாணம்,வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]