அண்மையில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி, மாலம்பேவிலுள்ளடர். நெவில் பெர்னாண்டோ போதானா வைத்தியசாலையின் (NFTH) நிர்வாகத்தை இலங்கை விமானப்படைக்கு (SLAF)க்கு ஒப்படைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பெப்ரவரி 23 ஆம் திகதி அந்நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ ஆய்வுப் பயணம் மேட்கொண்டார். இதன் போது, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவரை வரவேற்றார்.
"சொந்தமாக ஒரு இடம் அழகான வாழ்க்கை" ஆனைமடுவ, நவதத்தேகம, கருவலகஸ்வெவ, மகாகும்புக்கடவல மற்றும் வனாத்தவில்லுவ போன்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு காணி உரிமை - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன
இலங்கைச் சனத்தொகையில் குறிப்பிடத்தக்க அளவினர் வீடற்ற நிலையில் இருக்கின்றமை 2024 ஆம் ஆண்டின் குடிசன மற்றும் தொகைமதிப்பின் மூலம் பதிவாகியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வலுசக்தி வினைத்திறனை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசிய காரணியாகும் என்றும், இது வெறும் நுகர்வைக் குறைப்பது மாத்திரமன்றி, நாட்டின் அபிவிருத்திச் செயல்முறைக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான பங்களிப்பாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கணனி கூடம் திறந்து வைத்து மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை கடற்படை, கடலோர காவல்படை திணைக்களத்துடன் இணைந்து, 2026 பிப்ரவரி 21 ஆம் திகதி சிலாபம் மற்றும் தொடுவாவ கடல் பகுதிகளில் ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த மற்றும் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தொள்ளாயிரத்து தொன்னூற்று இரண்டு (992) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் (140,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், ஒரு தொகை பூச்சிக்கொல்லிகள், இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன.
திட்வா சூறாவளியால் சேதமடைந்த பதவிய, கெபிதிகொல்லாவ, ரம்பேவ, மஹாவிலச்சிய, நொச்சியாகம, தலாவ, ராஜாங்கனை, கல்னேவ, இபலோகம, திரப்பனே, பலுகஸ்வெவ, பலகல ஆகிய பிரிவுகளுக்குட்பட்ட வீடுகளின் கட்டுமானப் பணிகளின் முதல் கட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மேற்பார்வை செய்யும் விஜயமொன்றை கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க இன்று (25) மேற்கொண்டார்.
வடக்கு மாகாணத்தின் ஊர்ப் பெயர்களைப் பயன்படுத்தி வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் போலி உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் தூதுவர்களிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊழியர்களை வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது.
2026.02.13 ஆம் திகதி, தலங்கம பொலிஸ் பிரிவின் அக்குரேகொட பகுதியில் காரில் இருந்த ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை, இன்னொரு காரில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் 2026.02.21 ஆம் திகதி அம்பலங்கொட பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
வலுசக்தி தொடர்பான பாராளுமன்ற உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா அவர்களின் தலைமையில் 2026.02.18ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியதுடன், இதில் வலுசக்தித் துறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.
இந்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
