மழை நிலைமை:
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மழை நிலைமை:
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
2025 மார்ச் 10 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக குறைந்த பங்களிப்பை வழங்கிய எனினும் பாரிய அளவில் பங்களிப்பு வழங்கக்கூடிய வடமாகாணத்திற்கு அபிவிருத்தியை கொண்டு வரும் நோக்கில் வட மாகாணத்தில் இதுவரை காலமும் இடம்பெற்ற அரசாங்க நிறுவனங்களில் சிலவற்றை மீண்டும் செயற்படுத்த முடிந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு இணங்க உத்தேசிக்கப்பட்ட புதிய கைத்தொழில் நகரம் ஒன்றுக்காக அவசியமான திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கை தற்போது காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து முறையான மற்றும் வினைத்திறனான நடவடிக்கைகளுக்காக அண்மையில் (07) மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்சன சூரியப்பெரும, உட்பட்ட குழுவினருடன் வடக்கிற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்த குழுவினர் வடமாகாணத்தின் காங்கேசந்துறை கைத்தொழில் பூங்கா, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சீமெந்துத் தொழிற்சாலை உட்பட திட்டங்கள் சிலவற்றை மேற்பார்வை செய்தனர்.
புதிய திட்டமாக புதிய உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கும் ஆனையிறவு உப்பளத்தை மேற்பார்வை செய்தல், உத்தேசிக்கப்பட்ட கைத்தொழில் பூங்காவாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ள காங்கேசன்துறை , மாங்குளம் மற்றும் பரந்தன் இரசாயன நிறுவனத்திற்கான முதலீட்டை ஆரம்பித்தலுக்காக கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் அதிகாரிகளுடன் அவ்விடத்தைக் கண்காணித்தல் ஆகிவற்றிலும் குழுவினர் ஈடுபட்டனர்.
இதன்போது எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தற்போது காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் முழுமையாக அழிவடைந்துள்ள ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு அண்மையில் (07) புத்துயிரளிக்கக் கூடியதாக இருந்ததுடன் அதன் உற்பத்தி செயற்பாடுகளை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் விபரித்தார்.
இதன் ஊடாக புதிய தொழில் வாய்ப்புக்கள் பல இப்பிரதேச மக்களுக்கு கிடைக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர், நாட்டின் சகல மக்களும் இலங்கையர்களாக இன மத பேதம் இன்றி நாட்டின் பொருளாதாரத்திற்காக பங்களிக்கக்கூடிய பங்காளியர்களாக உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் மேலும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் முதலீட்டுச் சபையின் (BOI) தலைவர் அர்ஜுன ஹேரத், வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொட்டவில நீச்சல் தடாகம் (50 மீட்டர்) மற்றும் விளையாட்டு மைதானத்தை எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனையிறவு உப்பளத்தை அண்மையில் திறக்கவுள்ளதால், அதன் செயற்பாடுகளுக்கான மதிப்பீட்டுப் பணிகளில் நேற்று (07) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இணைந்து கொண்டார்.
தேசிய காலநிலை மத்திய நிலையத்தின் எதிர்வு கூறல் பிரிவினால் வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு நேற்று (07) நடைபெற்றது.
2024(2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 3527 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் நிற்கிறோம். இது நாம் ஒன்றுபடுவதற்கான தருணம் – அது வெறுமனே நாம் அடைந்துள்ள முன்னேற்றங்களை கொண்டாடுவதற்கானது மட்டுமானதல்ல. ஆனால் அது இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்புசார் சமமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய ஒரு காலமாகும்.
சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி சுமார் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் நடத்திய பேரணியின் விளைவாக மார்ச் 08 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சமூக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறி விழிப்புணர்வு மூலம் சமூகத்தை சிறந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கத்தை அடைய, கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தைத் திட்டமிடுதல், வழிநடத்தல் மற்றும் செயற்படுத்துதல் கிளீன் ஸ்ரீலங்கா செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, செயலாளரும் ஏற்பாட்டாளருமான ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, உள்ளிட்ட“கிளீன் ஸ்ரீலங்கா” செயலணியின் உறுப்பினர்கள், ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான கபில ஜனக பண்டார மற்றும் ரோஷன் கமகே மற்றும் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
5 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு தென்னை உர மானியம் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் வழங்கப்படும் என்றும், அதன்படி சந்தையில் ரூ.9500 ஆக உள்ள 50 கிலோ உர மூட்டை ரூ.4000 என்ற மானிய விலையில் வழங்கப்படும் என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து நன்கொடையாக பெறப்பட்ட 27,500 மெட்ரிக் டொன் உரத்தை பயன்படுத்தி, எப்பாகல ராக் பொஸ்பேட் மற்றும் யூரியா கலந்து தென்னைக்கான சிறப்பு உரம் 56,000 மெட்ரிக் டொன்னை உர நிறுவனம் தற்போது தயாரித்து வருவதாகவும், 5 ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு அந்த உரம் மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
நேற்று (05) பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஆலோசனைக் குழு அமைச்சரின் தலைமையில் கூடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நாட்டின் தென்னை வளர்ப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு 2.5 மில்லியன் விதை தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், இந்த ஆண்டு 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோணத்திற்கும், மீதமுள்ள 20,000 ஏக்கர் பிற பகுதிகளுக்கும் சொந்தமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]