ஆயிரக்கணக்கான மக்களின் போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்துவதற்காக, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்களின் போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்துவதற்காக, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொழும்பு நகர்ப்புற புகையிரத வீதிப் புனரமைப்புக் கருத்திட்டத்தின் கீழ் மாளிகாவத்த லொக்கோ சந்தியிலிருந்து பாதுக்க புகையிரத நிலையம் வரைக்குமான புகையிரதப் பாதை ஒதுக்கிடங்களில் சட்டவிரோதக் குடியிருப்பாளர்களுக்கான வீடுகளை வழங்கி அல்லது நட்டஈடு வழங்கி மீள்குடியமர்த்துவதற்காக 2024.08.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடவடிக்கைகள் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம வின் தலைமையில் சொறிக்கல்முனை 01 கிராமத்தில் நேற்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அஸ்வெசுவ நலன்புரி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக பல படிமுறைகளை நீதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிமுகப்படுத்தியதுடன், அதன் இறுதி படிமுறையாக அஸ்வெசும நலன்புரிக்காக விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று தகவல் சேகரிக்கும் பணிகள் ஜனவரி 21 முதல் 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், 2025 ஜனவரி 19 அன்று சேதமடைந்த வீரையடி குளத்தை வெற்றிகரமாக சீரமைத்தனர். மேலும் மண்அரிப்பு மற்றும் சேதத்தைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் படையினர் மண் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்த உடனடி நடவடிக்கையானது சுற்றியுள்ள சமூகங்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க உதவியது.
உலக வங்கியின் பிராந்திய நாட்டு இயக்குநர் (மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை) டேவிட் சிஸ்லன் தலைமையிலான உலக வங்கி தூதுக்குழு குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (ஜனவரி 20) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது.
2019 ஆம் ஆண்டில் க.பொ.த (உயர்தரம்) பெறுபேறுகளின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் முதலாவது மருத்துவக்கற்கை மாணவர் அணியினருக்கான மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சிகள் 2025 யூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்காசிய தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ நிறுவகத்தில் (SAITM ) காணப்படுகின்ற வசதிகளைப் பயன்படுத்தி மொரட்டுவைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு மற்றும் மருத்துவக்கற்கை மாணவர்களின் மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சிக்காக மருத்துவர் நெவில் பெர்னாந்து மருத்துவமனையின் வசதிகளைப் பயன்படுத்துவதற்கும் இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு, வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜப்பானில் நடைபெறும் உலக இளைஞர் கப்பல் நகழ்வில் பங்கேற்க உள்ள இளைஞர்கள் இன்று (21) இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவை சந்தித்தனர்.
தடகளத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சாதனை படைத்த சுகாதாரப் பணியாளர் தர்ஷனி சந்திரரத்னவுக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் விதந்துரைக்கமைய கீழ்வரும் பாடசாலை மாணவர்கள், பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்குப் பாதணிகளைக் கொள்வனவு செய்வதற்கான 3,000/- ரூபா வவுச்சர் ஒன்றை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]