All Stories

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் வீடு வழங்கல்

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 22ம் திகதி அன்று பண்டாரகம, வல்கமாவில் செல்வி எம். நிலுஷா குமாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை அதிகாரப்பூர்வமாக கையளிப்பதற்கான நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் வீடு வழங்கல்

ASEAN பிராந்திய மன்றம் - HDUCIM நிகழ்வில் பாதுகாப்பு கல்வி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 26வது ASEAN பிராந்தியத்தின் பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்தில் (ARF-HDUCIM) உரையாற்றுகையில், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்பவும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும் பாதுகாப்பு கல்வியின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.

ASEAN பிராந்திய மன்றம் - HDUCIM நிகழ்வில் பாதுகாப்பு கல்வி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்

CSD ற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் KHP பாலித்த பெர்னாண்டோ (ஓய்வு), நேற்று (ஜனவரி 23) தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

CSD ற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

மழை நிலைமை:

மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

வானிலை முன்னறிவிப்பு

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

எல்ல ஒடிசி புகையிரதத்தில் இடம்பெறும் இலத்திரனியல் பற்றுச்சீட்டு ஊழல் தொடர்பான சந்தேக நபர்கள் கைது

 

திருகோணமலை பிரதேசத்தில் புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரியினால் நேற்று (22) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எல்ல ஒடிசி புகையிரதத்தில் இடம்பெறும் இலத்திரனியல் பற்றுச்சீட்டு ஊழல் தொடர்பான சந்தேக நபர்கள் கைது

பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து நாடே கிளீன் ஆகும்…

பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து முழு நாடும் கிளீன் ஆகும் என்றும் கிராமம் வரை கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை கொண்டு செல்வதாகவும் குழுக்களின் தவிசாளர் பிமல் ரத்நாயக்க நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து நாடே கிளீன் ஆகும்…

இலங்கையில் திருமண வயது எல்லையை பொது வயது எல்லையாகக் கொண்டுவருவதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்மொழிவு

"பிள்ளை" என்பதற்கு சரியான வரைவிலக்கணம் வழங்குவது பற்றி பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கவனத்திற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் நேற்றுமுன்தினம் (21) பாராளுமன்றத்தில் கூடியது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். பத்தாவது பாராளுமன்றத்திற்கான பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயற்திட்டத்தை தயாரிப்பது குறித்து ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், இலங்கையில் திருமண வயது எல்லையை திருத்துவது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

 இலங்கையில் திருமண வயது எல்லையை பொது வயது எல்லையாகக் கொண்டுவருவதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்மொழிவு

தேங்காயை இறக்குமதி செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

தேங்காய் இறக்குமதி செய்வது தொடர்பாக எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேங்காயை இறக்குமதி செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம்

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழுவினர் நேற்று (22) திகதி மட்டக்களப்பிலுள்ள பல சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சமய தலங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர்  மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம்

பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மூன்று மாதங்களுக்குள் அவசியமான சட்ட நடவடிக்கைகள் 

பழங்குடி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட பாராளுமன்ற சட்டமூலத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக மற்றும் பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து காணப்படும் சட்ட சிக்கல்களை தீர்ப்பதற்கு சுற்றாடல் அமைச்சு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நேற்று  (22)  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மூன்று மாதங்களுக்குள் அவசியமான சட்ட நடவடிக்கைகள் 

சுற்றுலா வீசாவின் ஊடாக ஓமானுக்கு தொழில் வாய்ப்புக்கான கதவுகள் பூட்டு - இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்

சுற்றுலா வீசாவை பயன்படுத்தி ஓமான் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு ஓமான் நாட்டில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயம் ஓமான் அரசாங்கத்தின் பொலிஸ் அறிவித்தல் ஒன்றை மேற்கோள் காட்டி அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசாவின் ஊடாக ஓமானுக்கு தொழில் வாய்ப்புக்கான கதவுகள் பூட்டு - இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]