All Stories

தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாகக் குறைவடைகின்றது.

2026 பெப்ரவரி 23ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2026 பெப்ரவரி 22ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாகக் குறைவடைகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான நிரந்தர வீடமைப்புத் திட்டம்

 

2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2025.12.31 வரைக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டு 277,167 குடும்பங்களைச் சேர்ந்த 919,450 பேர் ஆரம்பக் கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2026 பெப்ரவரி 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மழை நிலைமை: காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் வடக்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மகாவலி கங்கையின்மகாவலி கங்கையின் நீரேந்துப் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு 

மகாவலி கங்கையின் சில நீரேந்து பிரதேசங்களுக்கு நேற்று இரவு முதல் கிடைக்கப்பெற்று வரும் மழைவீழ்ச்சி காரணமாக மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கில் கிண்ணியா, மூதூர், சேருவில, வெளிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உரித்தான மகாவலி கங்கையினைச் சார்ந்த தாழ்நிலப் பிரதேசங்களுக்கு தற்பொழுது முதல் எதிர்வரும் 24 மணித்தியாலய காலப்பகுதிக்குள் வெள்ள நிலைமை ஒன்று ஏற்படும் ஆற்றல் உள்ளது. மேலும் மட்டக்களப்பு -பொலன்னறுவை வீதி கெல்லேல்ல பிரதேசத்திலும், சோமாவதீ ரஜமகா விகாரையின் நுழைவாயிலும், சோமாவதீ ரஜமகா விகாரையினைச் சுற்றியுள்ள பிரதேசத்திலும் சிறு வெள்ள நிலைமை ஒன்று ஏற்படும் ஆற்றல் உள்ளதனால் தற்பொழுது முதல் எதிர்வரும் சில தினங்கள் கழியும் வரை சோமாவதீ ரஜமகா விகாரைக்கு பயணிக்கும் வழிபாட்டாளர்களும், அவ்வாறே மேற்படி பிரதேசங்களில் மகாவலி சுங்கைக்கு அண்மையில் வசிக்கும் பொதுமக்களும் இது தொடர்பில் தீவிர கவனத்துடன் இருக்கவும்,