All Stories

முக்கிய இந்திய நிறுவனங்கள் பலவற்றின் பிரதானிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வு

முக்கிய இந்திய நிறுவனங்கள் பலவற்றின் பிரதானிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வு - முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காதுஜனாதிபதி தெரிவிப்பு

முக்கிய இந்திய நிறுவனங்கள் பலவற்றின் பிரதானிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வு

பாதுகாப்பு தலைமையக வளாக நிர்மாண திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மதிப்பாய்வு

பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் நிர்மாண திட்டம் குறித்த உயர்மட்ட மதிப்பாய்வுக் கூட்டம் நேற்று (ஜூலை 1, 2025) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

பாதுகாப்பு தலைமையக வளாக நிர்மாண திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மதிப்பாய்வு

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணச்சுருக்கம் 2025 யூனில் மேலும் தளர்வடைகின்றது

2025 யூனில் பணச்சுருக்கம் தொடர்ந்தும் தளர்வடைந்தது. இதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணச்சுருக்கமானது மேயின் 0.7 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2025 யூனில் 0.6 சதவீததத்தைப் பதிவுசெய்து, சிறிதளவு குறைவான வீதத்தை எடுத்துக்காட்டியது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணச்சுருக்கம் 2025 யூனில் மேலும் தளர்வடைகின்றது

முல்லைத்தீவு கல்லிஅடி கால்வாய் திட்டம் தொடர்பான கண்காணிப்பு விஜயம்

 

 

முல்லைத்தீவு நந்திக்கடால் களப்பை அண்டிய பகுதியில் கல்லிஅடி கால்வாய் மற்றும் அதனை சூழவுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படும் ஏழு புதிய அணைக்கட்டுகள் நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பாக விசேட மேற்பார்வை விஜயம் ஒன்று காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்கவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. 

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று (01) முதல் கடுமையாக்கப்படும்

 

16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் யாசகம் எடுத்தல், தொழிலில் ஈடுபடுதல் மற்றும் 16 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வீட்டு வேலை உட்பட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தல் போன்றவற்றை ஜூலை முதலாம் திகதியிலிருந்து முழுமையாக தடை செய்வதற்குக் காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகளை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அண்மையில் (25) அமைச்சரவை அனுமதி வழங்கியது  

 

 

2022ஆம் ஆண்டு 39 ஆம் இலக்க சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் (திருத்தம்) சட்டத்திற்கு ஏற்ப 18 வயதுக்குக் குறைந்த சகல பிள்ளைகளும் சிறுவர்களாகக் கருதப்படுவதுடன், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கல்வி அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இது கட்டாயக் கல்வியைப் பெற வேண்டிய வயதாகக் கருதப்படும் 

 

 16 வயதை விடக் குறைந்த பிள்ளைகள் பாடசாலை கல்விக்கு அனுப்பப்படாதிருந்தால் அதற்கு எதிராக சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதுடன் இன்று முதல் இந்த சட்டங்கள் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அண்மையில் இடம்பெற்ற ஊடகக் கலந்துரையாடலில் வலியுறுத்தினார். 

 

 அவ்வாறே வீதியில் யாசகம் எடுத்தல், வியாபாரத்தில் ஈடுபடுதல், அபாயகரமான தொழிலில் ஈடுபடுதல் அல்லது ஏதேனும் வேறு முறைகளில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற மற்றும் சிறுவர் உதவி சேவை, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகத்தின் 109 அவசர அழைப்பு சேவைக்கு நாட்டின் எந்த ஒரு பொலிஸ் நிலையத்தின் ஊடாக அல்லது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதனால் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று (01) முதல் கடுமையாக்கப்படும்