----
2025 ஜூன் 29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூன் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
----
2025 ஜூன் 29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூன் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (29) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு இன்று (28) கல்வி அமைச்சில் நடைபெற்றது.
• பாராளுமன்றத்திலிருந்து அண்மையில் ஓய்வுபெற்றுச்சென்ற உரைபெயர்ப்பாளும் கௌரவிப்பு பாராளுமன்ற உரைபெயர்புத் துறைக்கு ஆற்றிய சிறந்த பணிக்காகப் பாராளுமன்ற முன்னாள் பிரதான உரைபெயர்ப்பாளரும் முன்னாள் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளருமான எம்.கே. ராகுலன் மற்றும் அண்மையில் ஓய்வுபெற்றுச்சென்ற 5 முன்னாள் உரைபெயர்ப்பாளர்களை பாராட்டும் நிகழ்வு அண்மையில் (26) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பாராளுமன்ற சேவைக்காலத்தில் ஆற்றிய சிறந்த பணிக்காக பாராளுமன்றத்தின் முன்னாள் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் முன்னாள் பிரதான உரைபெயர்ப்பாளருமான எம்.கே. ராகுலனுக்கு வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் உயர்ந்த கௌரவ விருது பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.
அத்துடன், அண்மையில் ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி பிரதான உரைபெயர்ப்பாளர்களான கே.எம். கிறிஸ்டோபர், ஐ.டி.எல். ரத்னசீலி, முன்னாள் சிரேஷ்ட உரைபெயர்ப்பாளர்களான எஸ்.ஆர்.எம். நிஸாம், எச்.வீ.எஸ். ஹீந்தெனிய மற்றும் சுனில் விஜேசிங்க ஆகியோருக்கும் இதன்போது கௌரவ விருதுகள் வழங்கப்பட்டன. இங்கு உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, முன்னாள் பிரதான உரைபெயர்ப்பாளர் எம்.கே. ராகுலன் இந்நாட்டின் பாராளுமன்ற உரைபெயர்ப்பு வரலாற்றில் அழிக்கமுடியாத அடையாளத்தை பதித்துள்ளார் எனக் குறிப்பிட்டார். அத்துடன், ஏனைய பாராட்டுக்களைப் பெற்றவர்களும் இலங்கை பாராளுமன்றத்துக்காக பல தசாப்தங்களாக ஆற்றிய பணிகள் தொடர்பில் செயலாளர் நாயகம் பாராட்டினார். இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் உரைபெயர்ப்பாளர்கள் தமது பாராளுமன்ற சேவையின் போதான மகிழ்ச்சியான மற்றும் சவால்மிக்க அனுபவங்களை நினைவுகூர்ந்தனர். பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா, பாராளுமன்ற பிரதான உரைபெயர்ப்பாளர் சீ.ஜே. கருணாரத்ன ஆகியோரும் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்களும் பாராளுமன்றப் பணியாளர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமை நேற்றைய தினம் (27.06.2025 ) பி.ப 1.30 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் D K S K தோலகே USP nps psc, இலங்கை இராணுவத்தின் 67வது பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக மனித கடத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளது, இது இலங்கைக்கு மட்டுமல்ல, முழு சர்வதேச சமூகத்திற்கும் ஒரு சவாலாக மாறியுள்ளது
கெஸ்பேவ பிரதேச செயலாளர் பிரிவின் நிவுன்கம கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பரவல் தொடர்பாக தெளிவூட்டுதல் மற்றும் வீடுகளை பரிசோதனை செய்தல் ஒன்று பணிகள் அண்மையில் (24) நடைபெற்றது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பொதுநலவாயக் கல்வி அமைப்பின் (COL) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 2025 ஜூன் 24 ஆம் திகதி கனடாவின் வான்கூவர் நகரை சென்றடைந்தார்.
நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார் வைத்தியசாலைகளுக்கு அண்மையில் அரச மருந்தகங்களை (ஒசுசல) ஆரம்பித்து மக்களுக்கு உயர் தரம் மற்றும் உயர் பண்புத் தரத்துடன் கூடிய மருத்துகளை நியாயமான விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் maritime facility கட்டத்தின் முன்னேற்றம் குறித்து கண்டறிவதற்காக விசேட கண்காணிப்பு விஜயத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு நேற்று (26) ஈடுபட்டார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]