All Stories

பாராளுமன்ற உரைபெயர்புத் துறைக்கு ஆற்றிய சிறந்த பணிக்காக பாராளுமன்ற முன்னாள் பிரதான உரைபெயர்ப்பாளரும் முன்னாள் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளருமான எம்.கே. ராகுலனுக்கு பாராட்டு

பாராளுமன்ற உரைபெயர்புத் துறைக்கு ஆற்றிய சிறந்த பணிக்காக பாராளுமன்ற முன்னாள் பிரதான உரைபெயர்ப்பாளரும் முன்னாள் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளருமான எம்.கே. ராகுலனுக்கு பாராட்டு

பாராளுமன்ற உரைபெயர்புத் துறைக்கு ஆற்றிய சிறந்த பணிக்காக பாராளுமன்ற முன்னாள் பிரதான உரைபெயர்ப்பாளரும் முன்னாள் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளருமான எம்.கே. ராகுலனுக்கு பாராட்டு

மாலைதீவு ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்

நிறுவனங்கள் குறித்தும் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் அறிந்துகொள்ளும் நோக்கில் இலங்கைக்கு கல்விசார் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 25.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தனர்.

மாலைதீவு ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய 2437/04ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2025 ஜூன் 17 திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதி தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த ஒழுங்குவிதிக்கு இங்கு அனுமதி வழங்கப்பட்டது.
1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்திற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்


இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவியில் தற்போதுள்ள வெற்றிடம் மற்றும் ஏற்படவுள்ள வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு தகைமையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


விண்ணப்பங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தின் www.parliament.lk என்ற இணையத்தளத்தில் கிடைக்கக்கூடிய ‘இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்திற்கு உறுப்பினர்களை நியமித்தல்’ எனும் இணைப்பிலுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு 2025 ஜுலை 11 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்படவேண்டும்.


விண்ணப்பங்களை, அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே; எனும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. இற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.


கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்திற்கு உறுப்பினர்களை நியமித்தல்’ எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
இணைப்பு: https://www.parliament.lk/.../sec.../advertisements/view/333

  • இலங்கை பாராளுமன்றம்.
இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்திற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்

தலைமன்னார் மணல் திட்டுக்கு அருகில் உள்ளூர் கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய இந்திய மீன்பிடி படகிலிருந்து மீனவர்களை கடற்படையினர் மீட்டனர்

நிலவும் பாதகமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பான சூழ்நிலையில், 2025 ஜூன் 25 ஆம் திகதி தலைமன்னாருக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் பகுதியில் உள்ள ஏழாவது மணல் திட்டுக்கு அருகே இந்திய கடற்பரப்பிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் மிதந்து வந்து கடலில் கவிழ்ந்த இந்திய படகு ஒன்றில் இருந்த நான்கு (04) மீனவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இலங்கை இராணுவத் தளபதியை சந்தித்தார் 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடஇலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவை இராணுவத் தலைமையகத்தில் 2025ஜூன் 25அன்று சந்தித்தார். 

இராணுவ மரபுகளின்படி நடைபெற்ற இந்த சந்திப்பின் போதுஇராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளிடையே முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன்மேலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை இராணுவ மற்றும் கடற்படையின் முக்கிய பங்களிப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 

மேலும், சகோதரப் படைகளுக்கு இடையேயான பிணைப்பு மற்றும்சேவை ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.