புதிய கல்வி சீர்திருத்தம் அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மூன்று பிரிவுகளில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும், ஆசிரியர் பயிற்சி, பாடசாலை அமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி ஆகியவற்றுடன் பாடசாலை பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக முன்வைத்து வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.