All Stories

இன்று பாராளுமன்றம் கூடுகின்றது

இன்று மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள், மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள், மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மற்றும்

இன்று பாராளுமன்றம் கூடுகின்றது

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தெரிவு

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்கள் (இன்று 24) தெரிவு செய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முதல் தடவையாகக் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தெரிவு

இலங்கை பாராளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் தினம் வைபவரீதியாக கொண்டாடப்பட்டது  

கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு (24) வைபவரீதியாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன் முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது.

இலங்கை பாராளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் தினம் வைபவரீதியாக கொண்டாடப்பட்டது  

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2025.01.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவு

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 

பெறுகை முறை மூலம் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்கள் 5 இலட்சம் அளவில் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
 
 
நிகழ்நிலை ஊடாக நாளொன்றை ஒதுக்கி, அந்த நாளில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
 
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய்மொழி மூலமாக கேள்விக்கு பதில் அளிக்கும் போது அமைச்சர் நேற்று (23) பாராளுமன்றத்தில் இதனை குறிப்பிட்டார். 
வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 

அடுத்த ஆண்டிலிருந்து புதிய கல்வி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்

புதிய கல்வி சீர்திருத்தம் அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று   (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

மூன்று பிரிவுகளில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும், ஆசிரியர் பயிற்சி, பாடசாலை அமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி ஆகியவற்றுடன்  பாடசாலை பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார். 

 

பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக முன்வைத்து வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

அடுத்த ஆண்டிலிருந்து புதிய கல்வி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்

வாகன அனுமதிப் பத்திர (பேர்மிட்) சலுகைகளை இரத்து செய்வதற்கு எவ்வித கொள்கைத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை - பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

அரசாங்க சேவையில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் எவ்வித கொள்கைத் தீர்மானங்களையும் எடுக்கவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

 

பாராளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க முன்வைத்த  கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

வாகன அனுமதிப் பத்திர (பேர்மிட்) சலுகைகளை இரத்து செய்வதற்கு எவ்வித கொள்கைத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை  - பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணி பல்வேறு நபர்களினால் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணை

அரசாங்கத்தின் காணிகளை அனுமதியின்றி பிடிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.  

எதிர்காலத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை வழங்கும் போது, பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்படும் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். 

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணி பல்வேறு நபர்களினால் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணை

காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்கான முறையான திட்டம்

காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்கான முறையான திட்டம்

கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாத வீட்டுத் திட்டங்களை முடிக்க புதிய திட்டம்

பல்வேறு பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டு கட்டம் கட்டமாக முடிக்கப்படாத வீட்டுத் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நிறைவேற்ற ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாத வீட்டுத் திட்டங்களை முடிக்க புதிய திட்டம்

உறுமய விடுவிப்புப் பத்திரத்தை வழங்குவதில் சிக்கல்

உறுமய  விடுவிப்புப்  பத்திரத்தை  வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.   பாராளுமன்றத்தில் உரையாற்றிய  பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

காணி ஆணையாளர்கள், காணி தொடர்பான நிபுணத்துவத்துவமுடைய  பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி அதிகாரிகள் பலருடன் தான் இது தொடர்பாக கலந்துரையாடியதாகவும், அந்த ஒவ்வொரு அதிகாரிகளும் இந்த விடுவிப்பு பத்திரத்தை வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக சுட்டிக் காட்டியதாகவும் பிரதி அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

உறுமய விடுவிப்புப் பத்திரத்தை வழங்குவதில் சிக்கல்

விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கு விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கு எந்தத் தொடர்பும் அல்லது தலையீடும் இல்லை என்றும், அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]