All Stories

இலங்கை - ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் (வைத்தியர்) தம்மிக பட்டபெந்தி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக கௌரவ சுற்றாடல் அமைச்சர் (வைத்தியர்) தம்மிக பட்டபெந்தி தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை - ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் (வைத்தியர்) தம்மிக பட்டபெந்தி தெரிவு

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் (09) அனுமதி வழங்கியது.

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

எம்.எஸ் அப்துல் வாசித் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகப் சத்தியப்பிரமாணம்

மொஹமட் சரிபு அப்துல் வாசித் அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

எம்.எஸ் அப்துல் வாசித் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகப் சத்தியப்பிரமாணம்

ஜூன் 30ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு தினம்

ஜூலை மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரம் – ஜூலை 8, 9 மற்றும் 11ஆம் திகதிகளில் விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஜூன் 30ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் (20) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

ஜூன் 30ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு தினம்

பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளர்க்கும் மற்றும் சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையேயான சந்திப்பு

பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளர்க்கும் மற்றும் சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையேயான சந்திப்பொன்று இடம்பெற்றது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for Multi-Sectorial Technical and Economic Cooperation) (BIMSTEC) பொதுச் செயலாளர் நாயகம் தூதர் இந்திரா மணி பாண்டே ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று (19) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு பல்வேறு BIMSTEC முயற்சிகளின் கீழ் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்புத் துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் இலவச சுகாதார அமைப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளை முன்னேற்றுவதற்கான அரசாங்கத்தின் புது முயற்சிகளுக்கு பொதுச் செயலாளர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், மேற்கத்திய மற்றும் உள்நாட்டு மருத்துவத் துறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை மேம்படுத்த BIMSTEC மற்றும் இலங்கைக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பின் முக்கியத்தை தெரிவித்தார்.
பிம்ஸ்டெக் இன் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் மற்றும் பங்களிப்புகளுக்கும் அதன் பொதுச்செயலாளர், தூதர் அம்ப் இந்திரா மணி பாண்டே மற்றும் அவரது ஊழியர்களுக்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி நன்றி களை தெரிவித்தார்.
பிம்ஸ்டெக் BIMSTEC குழுவில் 7 நாடுகள் அடங்கும் அவை பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகும்

பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளர்க்கும் மற்றும் சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையேயான சந்திப்பு

பாராளுமன்றம் எதிர்வரும் 17 முதல் 20 வரை கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2025.06.05 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 17 முதல் 20 வரை கூடும்