All Stories

நுவரெலியா வசந்த விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது

நுவரெலியா வசந்த விழா நேற்று (01) காலை அழகான கலாச்சார அம்சங்கள் மற்றும் பாடசாலை இசைக்குழுக்கள் உட்பட பல அம்சங்களுடன் தொடங்கியது.

நுவரெலியா வசந்த விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது

கித்துள், தென்னை மற்றும் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டம்

அரசாங்க கொள்கைகளை செயற்படுத்தும் வகையில் இலங்கையில் கித்துள், தென்னை மற்றும் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, கித்துள், தென்னை மற்றும் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக வருடாந்தம் புதுப்பிக்கத்தக்க வகையில் விபத்து ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை செயற்படுத்த கமநல மற்றும் கமநல காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது.

கித்துள், தென்னை மற்றும் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டம்

நாட்டில் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கு பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது

நாட்டில் புற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் செயல்படுத்தப்பட்ட தேசிய கொள்கை திட்டத்தை ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவை சமீபத்தில் சுகாதார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியது.

நாட்டில் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கு பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் தவிசாளர் குழு உறுப்பினர்களுக்கு அனுபவப் பகிர்வு தொடர்பான செயலமர்வு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் சபைக்குத் தலைமை தாங்கும் தவிசாளர் குழு உறுப்பினர்களுக்காக வெஸ்மினிஸ்டர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனுபவப் பகிர்வு தொடர்பான செயலமர்வு கடந்த மார்ச் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நீர்கொழும்பில் நடைபெற்றது. இலங்கைப் பாராளுமன்றம் மற்றும் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முக்கிய பங்குதாரர்கள் பாராளுமன்றத்தின் நடைமுறைகளைப் பலப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு பெறுமதிமிக்க தளமாக இந்த இரண்டு நாள் செயலமர்வு அமைந்தது.

இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, கௌரவ பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோர் இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.
ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையின் பிரதிச் சபாநாயகர் யூடித் கொமின்ஸ், மக்களவையின் முன்னாள் பிரதிச் சபாநாயகர் டோன் பிரைமரோலோ, ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கென்னெத் டொனால்ட் மக்கென்டொஷ் ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இதில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு அமைய தலைமைதாங்கும் அதிகாரிகளின் வகிபாகம் தொடர்பில் பல்வேறு தலைப்புக்களின் கீழ் இந்தச் செயலமர்வில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. தலைமைதாங்கும் அதிகாரிகளின் பதவிநிலை உருவான வரலாறு, அவர்களின் வகிபாகம், அதில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிகள் பற்றியும், நேரமுகாமைத்துவம், பாரம்பரியங்கள், நெறிமுறைகள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுடனான உறவுகள் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் பற்றியும் இதில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், ஐக்கிய இராச்சிய பாராளுமன்றதின் நடைமுறை உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு சட்டவாக்கச் செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்வதில் காணப்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் என்பன குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இலங்கைப் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள், நடைமுறைகள், பாரம்பரியங்கள் என்பன குறித்து இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர விரிவான விளக்கத்தை வழங்கினார்.


கௌரவ சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் தூதுக் குழுவினருடன் நேரடியான கலந்துரையாடல்களை நடத்தியமை இந்தச் செயலமர்வின் முக்கியமான அம்சமாக அமைந்தது. இலங்கையின் சட்டவாக்கச் செயற்பாடுகளில் தவிசாளர் குழாமின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு மாற்றியமைக்கக்கூடிய பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஆழமான புரிதலை இந்தக் கலந்துரையாடல்கள் எளிதாக்கின.
இரண்டாவது நாள் அமர்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கௌரவ அன்ரூ பற்ரிக் இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டமை இந்த நிகழ்வுக்கு மேலும் வலுச்சேர்த்தது.

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் தவிசாளர் குழு உறுப்பினர்களுக்கு அனுபவப் பகிர்வு தொடர்பான செயலமர்வு

உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டுக்கு உலக வங்கி உதவும்முகமாக கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளமைக்கு உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நன்றி தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி

ஒன்றினைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி

குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் "பெலெஸ்ஸ" உணவகத்தில் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்

, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.

மழை நிலைமை:

திருகோணமலையிலிருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து கல்விக்கான நிதியுதவி

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அன்றாட நிகழ்வாக மாறியிருப்பதால் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஊக்குவிப்பாக நிதியுதவியை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து கல்விக்கான நிதியுதவி

சுற்றுலாப் பயணிகளுக்காக சீகிரியாவில் பொது சுகாதார வசதிகள்

Clean Sri Lanka திட்டத்தின் கீழ் நகரப் பகுதிகளில் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்த ரூ.350 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாத்தளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிலந்த பரணகம தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக சீகிரியாவில் பொது சுகாதார வசதிகள்

போக்குவரத்து, சுற்றாடல், வர்த்தகம் மற்றும் மனித நேய எண்ணக்கருக்களின் ஊடாக போக்குவரத்துத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் மூன்று உப குழுக்கள்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் 2025 சனவரி மாதம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் மூன்று உப குழுக்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுத்தார்.

முறைசாரா போக்குவரத்துத் துறை சார்ந்த பணியாளர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முதலாவது குழு அமைக்கப்பட்டிருப்பதுடன், இது, போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்படாத ஊழியர்களை தொழில்சார் அடிப்படையில் ஏற்று அங்கீகரிப்பதை நோக்காகக் கொண்டுள்ளது. தனியார் பேருந்துச் சாரதிகள், நடத்துநர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மின்னணு செயலிப் பயன்பாட்டின் வாயிலாக போக்குவரத்துத் துறையில் ஈடுபடுபவர்கள் (App Base Workers), இவர்களுக்காக ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) ஆகியவற்றிற்கு பங்களிப்பு செய்தல் போன்ற விடயங்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும்.

இந்த உபகுழுவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான, சந்தன சூரியஆரச்சி (தவிசாளர்), ஜகத் விதான, தினிந்து சமன், தேவானந்த சுரவீர ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இரண்டாவது உப குழு, போக்குவரத்துத் துறை தொடர்பான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் போக்குவரத்துத் துறை சரியான தடத்தில் பயணிக்க வழிநடாத்துவதற்கான குழுவாக அமைந்துள்ளது. போக்குவரத்துத் துறை தொடர்பான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல், எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் போக்குவரத்துத் துறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தல், போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தும் போது பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துதல் மற்றும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான சட்ட மற்றும் நிருவாக முன்மொழிவுகளை சமர்ப்பித்தல் என்பன இந்தக் குழுவின் நோக்கங்களாகும்.


கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர அவர்களைத் தவிசாளராகக் கொண்ட இந்த உபகுழுவில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த த சில்வா, தனுர திசாநாயக, சுஜீவ திசாநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய இதர சேவைகளை உருவாக்குவதற்கான வணிக மாதிரிகளை (Business Models ) உருவாக்குவதை நோக்காகக் கொண்டு மூன்றாவது உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி, போக்குவரத்துத் துறையின் அடிப்படை நோக்கங்களுடன் தொடர்புடைய துறைகளை மேம்படுத்தல் மற்றும் இதர சேவைகளை உருவாக்குவதன் மூலம் கூடுதலான வருமானத்தை ஈட்டுவதற்கான வணிக மாதிரிகளை உருவாக்குவது பற்றி இந்தக் குழு ஆராயும்.
இந்த உபகுழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்ஹ (தவிசாளர்), ரவீந்திர பண்டார மற்றும் தனுஷ்க ரங்கனாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து, சுற்றாடல், வர்த்தகம் மற்றும் மனித நேய எண்ணக்கருக்களின் ஊடாக போக்குவரத்துத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் மூன்று உப குழுக்கள்

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய கொடியேற்றம்.

தெட்சணகைலாசம் என்னும் திருகோணமலையில் அருளாட்சி புரியும் பூலோக மகாசக்தி, 18 சக்தி பீடங்களில் முதன்மையானதும் 51 சக்தி பீடங்களில் ஒன்றுமாகிய அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்மஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் இன்று (01) காலை 8.00 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அம்பாளின் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற தொடங்கினார்கள். ஆண்கள் அங்கப்பிரதட்ஷனையும் பெண்கள் அடிஅழித்தல் நிகழ்வும் நடைபெற்றது.

கற்பூரச்சட்டி எடுத்தல், அடிஅழித்தல், அங்கப்பிரதட்ஷணம் செய்யும் விரத அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை கோபுர வாசலில் இருந்து ஆரம்பித்து கோபுர வாசலிலேயே நிறைவு செய்வதை காணக்கூடியதாக அமைந்தது.

மேலும் விசேட பூஜை நடைபெற்று அம்பிகையானவள் வெளி வீதி வலம் வந்து பக்த அடியார்களுக்கு காட்சியளித்தார். பின்பு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு பூஜை இனிதே நிறைவு பெற்றது. அம்பிகை அடியார்களுக்கு மகேஸ்வர பூஜை என்று அழைக்கப்படும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

எதிர்வரும் வியாழக்கிழமை (10) காலை 8.00 மணிக்கு இரதோற்ஸவமும், வெள்ளிக்கிழமை (11) தீர்த்தோற்ஸவமும், அன்று இரவு துவஜ அவரோஹணம் என்னும் கொடியிறக்கமும் இடம்பெறும்.

காராம்பசு வாகனம், மகர வாகனம், சர்ப்ப வாகனம், அன்ன வாகனம்,மஞ்சத்தில் பவனி வருதல், கைலாச வாகனம்,புராதன சிம்ம வாகனம், குதிரை வாகனம், சப்பரத் திருவிழா, இரதோற்சவம், தீர்த்தோற்சவம் என 11 நாட்களைக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உற்சவங்கள் நடைபெறும். இறுதியாக பூங்காவனத்துடன் திருவிழா இனிதே நிறைவடையும்.

மகோற்சவ காலங்களில் விசேட நாதஸ்வர தவில் கச்சேரிகளுடன் திருவிழா சிறப்புற நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் அம்பிகையின் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய கொடியேற்றம்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]