All Stories

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில்

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் 2025.03.25 ஆம் திகதி இடம்பெற்றது.

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில்

பூனகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை தெஹிஅத்தக்கண்டிய பிரதேச சபை ஆகிய பிரதேச சபைகளின் வாக்கெடுப்பு திகதி அறிவிப்பு

பூனகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை தெஹிஅத்தக்கண்டிய பிரதேச சபை ஆகிய பிரதேச சபைகளின் வாக்கெடுப்பு திகதி பற்றி தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பூனகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை தெஹிஅத்தக்கண்டிய பிரதேச சபை ஆகிய பிரதேச சபைகளின் வாக்கெடுப்பு திகதி அறிவிப்பு

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு.

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் இப்தார் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வானது இன்று (26) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு.

சிநேகபூர்வ அடிப்படையில் வெளிநாட்டு சேவையில் நியமனங்கள் மேற்கொள்ளப்டுவதில்லை - அமைச்சரவை பேச்சாளர் 

வெளிநாட்டு சேவைக்கு நியமனங்களை மேற்கொள்ளும் போது, சி்நேகபூர்வத்தின்  அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்வதில்லை என அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சிநேகபூர்வ அடிப்படையில் வெளிநாட்டு சேவையில் நியமனங்கள் மேற்கொள்ளப்டுவதில்லை - அமைச்சரவை பேச்சாளர் 

சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 50,000 பேருக்கு டைபாய்டு தடுப்பூசி

சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை முழுவதும் சமையல், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள 50,000 பேருக்கு "டைபாய்டு" தடுப்பூசியை வழங்குவதற்கான சிறப்புத் திட்டத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தொற்றுநோயியல் பிரிவு சமீபத்தில் செயல்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் டைபாய்டு பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளின் புள்ளிவிவரங்கள், கடந்த காலகட்டத்தில் டைபாய்டு நோயின் பரவல் சமையல், உணவு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளில் அதிகமாக அவதானிக்கப்பட்டது. எனவே, அந்தத் துறைகளில் பணிபுரிபவர்களை இலக்காகக் கொaண்டு இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் மருத்துவர் திலங்க ருவான் பத்திரண தெரிவித்தார்.

இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் டைபாய்டு காய்ச்சலிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் நோய் பரவும் அபாயத்தையும் நீக்குகிறது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், மேலும் நாடு முழுவதும் காணப்படும் 358 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த டைபாய்டு தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் நடமாடும் உணவு விற்பனையாளர்கள், உணவக ஊழியர்கள், நெரிசலான இடங்களில் உணவு விற்பனையாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு குழுக்களாக உணவு தயாரித்து, விற்பனை செய்து, விநியோகிக்கும் தனிநபர்களை மையப்படுத்தி செயல்படுகிறது.

டைபாய்டு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க இந்த தடுப்பூசியை ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் போட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த இலவச தடுப்பூசி திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களை, தொற்றுநோயியல் பிரிவு மற்றும் நாடு முழுவதும் அமைந்துள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் பெறலாம்

சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 50,000 பேருக்கு டைபாய்டு தடுப்பூசி

தேசிய புது அரிசி விழாவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் புது அரிசி விழா ஏற்பாடு செய்யப்பட்டது

58வது தேசிய புது அரிசி விழாவுடன் இணைந்து அம்பாறை மாவட்ட புது அரிசி விழா நேற்று (26) பல்லன்ஓயா விவசாய சேவை நிலையத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

தேசிய புது அரிசி விழாவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் புது அரிசி விழா ஏற்பாடு செய்யப்பட்டது

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் பிரதியமைச்சரின் தலைமையில் நடைபெற்றது

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் கௌரவ தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த மற்றும் நிதி, கொள்கை வகுத்தல் கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் பிரதியமைச்சரின் தலைமையில் நடைபெற்றது

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் மீதான தடைகள்” என்ற தலைப்பில் ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகத்தின் அறிவித்தல்

“இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் தடைகள்” என்ற தலைப்பில் ஐக்கிய இராச்சியத்தின், வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகம் (FCDO) வெளியிட்ட 2025, மார்ச் 24 எனத் திகதியிட்ட செய்தி வெளியீட்டை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு கவனத்தில் கொள்கிறது.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் மீதான தடைகள்” என்ற தலைப்பில் ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகத்தின் அறிவித்தல்

புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அமெரிக்கத் தூதரின் பாராட்டு

புதிய அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் மற்றும் பிற நன்மைகளை வழங்குவதில், பாரபட்சம் பாராமல் நியாயமாக செயல்படுவது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதர் ஜூலி சங் (Julie Chung) தனது பாராட்டைத் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அமெரிக்கத் தூதரின் பாராட்டு

தற்போதைய அரசாங்கம் உற்பத்திப் பொருளாதாரத்தில் ஏற்றுமதியைப் பெருக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது

தற்போதைய அரசாங்கம் உற்பத்திப் பொருளாதாரத்தில் ஏற்றுமதியைப் பெருக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி 25வது ஏற்றுமதியாளர்கள் மன்றத்தில் கூறினார்

தற்போதைய அரசாங்கம் உற்பத்திப் பொருளாதாரத்தில் ஏற்றுமதியைப் பெருக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது

இராணுவத் தளபதி யாழ் குடாநாட்டிற்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 24 மற்றும் 25 ம் திகதிகளில் யாழ். குடாறாட்டிற்கான விஜயம் மேற்கொண்டார்.

இராணுவத் தளபதி யாழ் குடாநாட்டிற்கு விஜயம்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]