பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் ‘ஒரே பதிவு’ (One Registry) வேலைத்திட்டத்தின் கீழ், பிரதேச செயலகங்களில் பணியாற்றும் 100 பதிவாளர் அதிகாரிகளுக்கு புதிய கணனி உபகரணங்களை வழங்கும் விசேட நிகழ்வு நேற்று (07) பதிவாளர் நாயகம் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் பிரதி அமைச்சர் ருவன் சேனாரத்ன ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


