All Stories

நாட்டில் தாதியர் சேவைக்கான பயிற்சிக்காக 2918 புதிய மாணவர் தாதியர்கள் இணைப்பு

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டாலும் இல்லாவிட்டாலும், சுகாதாரம் எப்போதும் ஒரு அத்தியாவசிய சேவையாகும்

- சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ -

இந்த நாட்டில் சுகாதார சேவையின் அளணி வளத்தை மேம்படுத்துதல் மற்றும் மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, மாணவர் தாதியர் பயிற்சிக்காக 2918 மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணி நேற்று (14) காலை அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்றது.

நாட்டில் தாதியர் சேவைக்கான பயிற்சிக்காக 2918 புதிய மாணவர் தாதியர்கள் இணைப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2026 மார்ச் 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2026 மார்ச் 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய ஊடகக் கொள்கையின்" மேம்படுத்தப்பட்ட  வரைவினை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வு

நீண்டகால மற்றும் விரிவான ஆலோசனைச் செயல்முறையின் பின்னர் தயாரிக்கப்பட்ட "இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கையின்" மேம்படுத்தப்பட்ட வரைவானது, (Advanced Draft) இன்றைய தினம் (14) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வெகுஜன ஊடகப் பிரதியமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆகியோரிடம் வெகுஜன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய ஊடகக் கொள்கையின்" மேம்படுத்தப்பட்ட  வரைவினை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச  நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட  விசேட செயலமர்வு, கடந்த 12 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச  நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடக்கு மீனவ சமூகம் முன்னிலை வகிக்கின்றன..

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழல், சுற்றுலாத் துறை மற்றும் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்து வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களின் தலைமையில், அப்பகுதியில் உள்ள சட்ட அமலாக்க முகவர் மற்றும் வட மாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளின் பங்கேற்புடன், 2026 மார்ச் 10 ஆம் திகதி வடக்கு நிறுவனத்தில் சிறப்பு நிகழ்ச்சித் தொடர் ஒன்று நடைபெற்றது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடக்கு மீனவ சமூகம் முன்னிலை வகிக்கின்றன..

மன்னாரின் வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்படையினர், மன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் பகுதியில் 2026 மார்ச் 11 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) இரண்டு (02) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

மன்னாரின் வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.