2026 மார்ச் 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மார்ச் 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மார்ச் 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மார்ச் 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) பிற்பகல் நடைபெற்றது.
மத்திய கிழக்குப் போரினால் நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட வலுசக்தி விநியோகக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் அந்தத் தடைகளை எதிர்கொண்டு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு துறையினராலும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மாற்று வழிகள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR குறியீடு நடைமுறை தற்போது முழுமையாக மீளமைக்கப்பட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இத்திட்டம் தற்போது தடையின்றி இயங்கி வருவதாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் யுத்த நிலை காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகம் தடைபட்டு வருவதாக நாட்டில் எரிபொருள் தேவை அசாதாரண முறையில் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் நாட்டில் நிலவும் எரிபொருள் இருப்பை பாதுகாப்பாக வேண்டுவதற்காகவும் எரிபொருள் வழங்குவதற்காக QR குறியீடு இன்று (15) காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. .
QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.


