All Stories

"இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன் - பிரதமர் 

"இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்த நேர்மறையான மாற்றம் பெண்களின் குரல்கள் மேலும் விரிவாக மற்றும் அதனை உள்ளடக்கிய நிர்வாகத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்கிறது". - பிரதமர் 

"இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன் - பிரதமர் 

மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

2025 ஜூன் 02ஆம் திகதிக்கு முன்னர் உண்டியல் மூலம் பணம் அனுப்பும் செயற்பாடுகளில் (ஹவாலா) ஈடுபட்டுள்ளவர்களை இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யுமாறு கோரிக்கை

அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நான்கு ஒழுங்குவிதிகளில் மூன்று ஒழுங்கு விதிகளுக்கும், கட்டளை ஒன்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

இராணுவத் தளபதி மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம்

இராணுவத்தின் 25வது தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றதற்கு பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோவுடன் இணைந்து 07 ஜனவரி 2025 அன்று அத்திட்டிய மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்து போர் வீரர்களைப் பார்வையிட்டார்.

இராணுவத் தளபதி மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை 

மழை நிலைமை:

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை 

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர், சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை சந்தித்தார் 

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கௌரவ இஸொமாடா அகியோ (Isomata Akio) அவர்கள் அண்மையில் (06) கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். 

இதன்போது சபாநாயகருக்கு அரசாங்கத்துக்கும் ஜப்பான் தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜப்பான் மற்றும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவு தொடர்பில் சுட்டிக்காட்டிய ஜப்பான் தூதுவர், எதிர்காலத்திலும் அந்தத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான ஆதரவுகளை வழங்குவதாகத் தெரிவித்தார். 

அத்துடன், தற்பொழுது இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தின் நிர்மாணப்பணிகளை விரைவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜப்பான் தூதுவர் தெரிவித்தார். 

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இந்நாட்டின் மக்களுக்கு ஜப்பான் அரசினால் வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன் அதற்காக ஜப்பானுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், இரு நாடுகளினதும் பாராளுமன்றங்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை - ஜப்பான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஊழலை ஒழித்தல் மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இதன்போது பாராட்டப்பட்டது.

 

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர், சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை சந்தித்தார்