அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ், பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு நடத்த எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ், பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு நடத்த எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்
சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவர்களின் பொறுப்பாகும்
- புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு
சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், புதிய நியமனங்களை பெற்ற இராஜதந்திரிகளிடம் இருந்து அவ்வாறானவற்றை எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. இங்கு உரையாற்றுகையிலே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுமாறும் அந்த நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கு முன்னின்று பாரபட்சமின்றி நியாயமாக செயற்படுமாறும் ஜனாதிபதி புதிய இராஜதந்திரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இலங்கைப் பணியாளர்கள் தொழில்புரியும் மத்திய கிழக்கு, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இராஜதந்திர சேவைகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் பணியை இராஜதந்திர சேவையின் ஊடாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டு வருவது தூதுவருக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பு எனவும், அதற்கு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 04 தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நியமித்தார்.
இராஜதந்திர சேவையில் 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இவ்வாறு இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி,
கத்தார் நாட்டின் தூதுவராக - ஆர்.எஸ்.கான் அசாத்
ரஷ்ய தூதுவராக - திருமதி எஸ்.கே. குணசேகர
குவைத் தூதுவராக - எல்.பி.ரத்நாயக்க
எகிப்திய தூதுவராக - ஏ.எஸ்.கே.செனவிரத்ன
நியூசிலாந்து உயர்ஸ்தானிகராக - டபிள்யு.ஜீ.எஸ். பிரசன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
07.01.2025
உலகில் அதிக இலாபம் ஈட்டும் வியாபாரமாக தற்காலத்தில் மோசடியாக மாறியுள்ள மருந்துத் துறையின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மற்றும் அவற்றை சரியாக திருத்துவதற்கு முன்னிற்கும் சகல ஊழியர்களையும் ஊக்குவிப்பதற்கு, அவர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் துணை நிற்கும் என்றும் கடத்தல்காரர்கள் அல்லது அந்த குழுவின் இலக்குகளுக்காக அமைச்சு அல்லது அரசாங்க சேவைகள் மேற்கொள்ளப்படாது என்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் (NMRA) விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
தரம், தன்மை, மருந்து தொடர்பான சகல செயற்பாடுகளிலும் பிரச்சனைகள் ஏற்பட்டால் ஒரு அணியாக சகலரும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், பொறுப்புடன் கூடியதாக செயற்படுதல் முக்கியமானது என வலியுறுத்தினார்.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை நாட்டில் காணப்படும் மருந்து உற்பத்திகளின் பாதுகாப்பு, தரம் மற்றும் வினைத்திறன் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரச் சான்றிதழ் ஊடாக பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பை மேற்கொள்ளுதல் மற்றும் முன்னேற்றுவதற்காக முன்னணி செயல்பாடுகளை மேற்கொள்வதுடன், மருந்துகள், சுகாதாரப் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் அழகுக்கலை பொருட்கள் பாதுகாப்பு, தரம் மற்றும் வினைத்திறனை சான்றுப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்தல், கண்காணித்தல் மற்றும் சாட்சி அடிப்படையிலான தீர்மானங்களை வழங்கும் நிறுவனமாகும்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, கணிசமான அளவு நிதியை, இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்தியக் கடன் உதவியின் கீழ் மாத்தளை மாவட்டத்தில் உள்ள மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட சூரிய மின்கலங்களை ஒரே இடத்தில் நிறுவி, அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புக்கு இணைத்து, மாத்தளை மாவட்டத்தில் உள்ள விகாரைகள் உள்ளிட்ட மதஸ்தலங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் சாத்தியம் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசானாயக்க தெரிவித்தார்.
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்புப் பணியில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 100 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் நேற்று (06) நடைபெற்றது.
நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் நேற்று (ஜனவரி 03) யாழ்ப்பாணம், வேலணை நான்காம் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இலங்கை கடற்படையின் Midshipman டி.எம்.ஐ. விமுக்தி தென்னகோன் கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை கலாசாலையின் (PNA) 122 வது Midshipman மற்றும் 30 வது குறுகிய சேவை உள்வாங்கல் (SSC) பாடநெறியின் அதிகாரமளிப்பு விழாவின் போது, Sword of Honour விருதை பெற்றார்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் ( Santosh Jha ) மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர் இன்று (06) இளைஞர் விவகாரம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வட சீனாவில், குறிப்பாக குழந்தைகளிடையே சுவாச நோய்களின் அதிகரிப்பைக் குறிக்கும் சமூக ஊடக அறிக்கைகளை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பதால், உண்மையான உண்மைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]